UAE யில் இன்றைய
நாளிதழ்களின்
தலைப்புச்செய்தி யே
இதுதான்..
UAE கூட்டு அரசாங்கத்திலும்
ஏழு தனித்தனி அமீரகங்களிலும்
பணிபுரியும் ஊழியர்களுக்கு
ஒரு மாத அடிப்படைச்சம்பளம்
சிறப்பு போனசாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களிலும்
இராணுவத்திலும்
பணியாற்றும்
ஊழியர்கள். மற்றும்
ஓய்வூதியர்கள் பயனடைவர்.
சமூகப்பாதுகாப்பு திடங்களில்
உதவி பெற்றுவரும்
பயனாளிகளுக்கும்
இத்தொகை கிடைக்கும்.
இந்த தொகை ரம்சான்
பண்டிகைக்கு முன்னரே
வழங்கப்பட வேண்டும் என
உத்தரவிடப்பட்டுள்ளது.
மைய அரசாங்கம் கொடுக்க
போனஸ் தொகை
மட்டும் இந்திய மதிப்பில்
ரூ.1900 கோடியாகும்.
தனித்தனி யாக அமீரகங்கள்
அவரது ஊழியர்களுக்கு
வழங்கும் போனஸ் மதிப்பு
இதில் சேர்க்கப்படவில்லை.
ஆங்கில ஏகாபத்தியத்திலிருந்து
விடுபட்டு தன்னாட்சி அமைப்பாக
2-12-1971 ல் UAE யாக
செயல்படத்துவங்கியபோது
முன்னின்று வழிநடத்தியவர்
மன்னர் ஷேக் சயீது அவர்கள்.
ஐக்கிய அமீரகத்தை
உலகின் முன்னணி இடத்திற்கு
கொண்டுவர திட்டங்கள் தீட்டி
அவற்றை வெற்றிகரமாக
செயல்படுத்திக்காட்டிய
சிற்பி அவர்.
அவர் பிறந்த
நூறாவது ஆண்டினை
மக்களின் ஈடுபாட்டுடன்
நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்கள்.
வழங்கியே பழக்கப்பட்ட
வள்ளலின் அடையாளம்
அந்த மன்னர் ஷேக் சயீது.
அவரது
மறைவிற்குப்பின்னரும்
அனைவரையும்
உற்சாகப்படுத்திக்கொண்டு
அவர்களின் உள்ளங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
இவரது நூற்றாண்டு
விழாக்கொண்டாட்டத்தின்
ஒரு அம்சமாகத்தான்
அரசாங்கம் தனது
தங்க நிகர் அங்கங்களுக்கு
இந்த போனஸ் அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
சரி..சரி..
நூற்றாண்டு விழாக்
கொண்டாட்டத்தை முன்னிட்டு
அந்த நாட்டில்
நாட்டின் முன்னேற்றத்திற்கு
பங்களிக்கும் ஊழியர்களுக்கு
போனஸ் வழங்குகிறார்கள்.
நம்மூர்ல நூற்றாண்டு விழாக்
கொண்டாடும்போது
கொலை, கொள்ளை யில்
ஈடுபட்டு சிறைகளில்
தண்டனை பெற்றுவருபவர்களை
விடுதலை செய்கிறார்கள்.
முன்னேறிவிடும்
நம்ம நாடு..
No comments:
Post a Comment