யோவ்..சொடல..
நம்ம எல்ஐசி
அம்பாசமுத்திரம் கெளையில
1980-90 லல்லாம்
டைப்பிஸ்டாவும்
பொறவு ஹெச்.ஜி.யே வா
இருந்தாவொள்ளா
உ சங்கரசுப்பையன்..னு
ஒருத்தரு.
அவொ இப்பம் மெட்ராசுல
ஒரு ப்ராஞ்ச்ல அட்மின்
மேனேஜரா இருக்காவொ.
அந்த ஆபீசுக்கு
ரெண்டுநாளைக்கி முந்தி
சினிமா நடிகர் நெழல்கள்
ரவி வந்தாவொளாம்.
அவொளோட பாலிசி ஒண்ணு
மெச்சூரிட்டி ஆகுதாம்.
அதுக்கான டிஸ்சார்ஜ்
பாரத்தை நேர்லயே வந்து
கொடுத்தாவொளாம்.
அப்ப நம்ம தம்பியாபுள்ள
அவொளோட ஒரு போட்டோ
எடுத்துக்கிட்டாவொளாம்.
அந்த போட்டோவை
வாட்சாப்ல பாத்தமுய்யா.
ஒமக்கு ஒடனே
அனுப்பி வைக்கம்யா.
பாரும்."
"ஏல ..எசக்கி
ஒடனே அனுப்பி வைடே..
நான் தஞ்சாவூர்ல
இருந்தமுல்ல.
அப்போ அவொ
தொறையூர்ன்னு
ஒரு ஊர்ல வேலை
பாத்தாவொ.
அவொகிட்ட ஒரு நாளு
ஒங்க அப்பா பேரு
உதிரவாசகமா ன்னு
கேட்டதுதான் கேட்டேன்.
அவொ அப்பிடியே
அசந்துட்டாவொ.
சார்வாளுக்கு
ஜோசியம் தெரியுமான்னு
ஆச்சரியமா கேட்டாவோ..
'உ' ன்னு
பேரு ஆரம்பத்தில வந்து
அதிகமா பார்த்தது இல்ல.
பாளையாங்கோட்டையில
குமரன் கபே ன்னு ஒரு ஓட்டல்
அந்தக்காலத்துல
வடக்குபஜார்ல பேமசு.
அந்த ஓட்டல் மொதலாளி
பேரு உதிரவாசகம்.
எனக்கு நாலு தாய்மாமா.
கடைக்குட்டி மாமா பேரு
உதிரவாசகம் ரத்தினம்.
ஒரு நாளு
ஓட்டல் மொதலாளி ஏங்கிட்ட
உதிரவாகம்ங்க பேருல
நானும் ஒன்னோட
மாமாவும்தான்டே
இருக்கோம்னு
சொன்னாரு.
இப்போ ஒரு
மூணாவது ஆளு
இருக்காருன்னு
சந்தோசப்பட்டேன்.
அதுனாலதான்
அவருகிட்ட அப்பா பேரு
உதிரவாசகமான்னு
கேட்டேன்.
அவருக்கு சந்தோசம்
தாங்கல.."
" ஆமவே சொடல..
நானும் இப்பத்தான்
இந்த பேரை
கேள்விப்படுதேன்"
"சரி டே எசக்கி..
இந்த நெழல்கள் ரவி
சினிமா நடிகர்னு தான
ஒனக்குத் தெரியும்.
அவொள ப்பத்தி
வேற எதாவது
தெரியுமாடே"
"தெரியாது.
நீரு கேக்குத பத்தா
ஒம்ம கைல எதோ
சங்கதி இருக்கமாதிரி
தெரியுது.
நீரே சொல்லும்யா"
"எல்ஐசி யோட
ஆரம்ப காலத்துல
டிவிசனல் மேனாஜரா
திரு சாமண்ணா ன்னு
ஒரு பெரியவரு
இருந்தாவொ.
அவொ தான்
நெழல்கள் ரவியோட
அப்பா
மதுரை யில
தஞ்சாவூர்ல ல்லாம்
இருந்துருக்காவொ.
தஞ்சாவூர்
டிவிசனுக்கு அவொ தான்
மொதல்
கோட்ட மேலாளருன்னு
நெனய்க்கேன்.
திருநெவேலில
அந்த காலத்துல
வெங்கடாச்சலம் பிள்ளைன்னு
ஒரு டெவலப்மெண்ட்
ஆபீசரு.
அவரோட மகன்ல
ஒருத்தரு பேரு
சுந்தரலிங்கம்.
அவரை
எல்ஐசில சேக்கதுக்கு
சாமண்ணா ஐயா
ஒதவியிருக்காவொ.
அதுக்காக
சுந்தரலிங்கத்துக்கு
மவன் பொறந்ததும்
அந்தக் கொளந்தைக்கு
சாமாண்ணா ன்னு
பேருவச்சுருக்காவொ.
சாமாண்ணா ஐயா மேல
அவ்வொளவு பக்தி அந்த
குடும்பத் தாளுவொளுக்கு."
"யாரு...நம்ம
அக்கவுண்ட்ஸ்
டிபார்ட்மெண்ட்ல
வேலைபாத்து
ஒரு பத்து வருசத்துக்கு
முன்னால
ரிட்டயர் ஆனோவொள
அந்த சுந்தரலிங்கமா சொடல"
",ஆம டே.
அதே சுத்தரலிங்கந்தான்டே..
அவரோட மவன்
சாமண்ணாவோட
பெஞ்சாதியும் இப்போ
எல்ஐசிலதான்
வேலை பாக்காவொ."
" ஏ ..சொடல..
நம்ம எல்ஐசி காரவொளுக்கு
நெழல்கள் ரவியோட அப்பா எல்ஐசியில ஒரு
டிவிஷனல் மேனேஜரா இருந்தாருங்கிற
ஒரு நல்ல தகவலை
சொல்லியிருக்கேரு.
இந்த உதிரவாசகம்,
சாமண்ணா ன்னு
தகவல்களயெல்லாம்
எப்படித் தான்
தெரெட்னேரோ.
அதிசயம் தாம்யா."