என்னைப் பெற்றடுத்து
வளர்த்து மகிழ்ந்த
தாய் ராஜம்மாள்.
ஆனால் என்னை
உயர்த்திப் பார்த்து
உளமாற மகிழ்ந்த தாய்
*எல்.ஐ.சி அம்மாள்.*
இவளுக்கு
இன்று வயது 61..
ஆனால் என்றும்
இவள் 16 தான்.
வேகத்தில் இவள் ஒரு
பதினாறு வயது
*பருவ மங்கை.*
விவேகத்தில் இவள்
அனுபவம் நிறைந்த
அறுபத்தோறு வயது
*அழகு மங்கை.*
தோற்றத்தில் என்றும்
இவள் பதினாறு.
அதனால் தான்
என்றுமே இவள்
தோற்றதேயில்லை.
அனுபவத்தில் இவள்
அறுபத்தி ஒன்று.
இவளுடன் போட்டிக்கு
இருபத்தி மூன்று.
ஆனாலும்
அதுபத்தி எப்போதும் இவள்
கவலைப்பட்டதேயில்லை.
என்றுமே இவள்
புலி வேகம்தான்.
எப்போதுமே இவள்
புலிப்பாய்ச்சல் தான்.
எனக்கு மட்டுமல்ல
இவள் தாய்.
ஒரு லட்சத்து
பதினைந்தாயிரம்
ஊழியர்களுக்கு
இவள் தாய்.
பதினோரு லட்சத்து
முப்பதாயிரம்
முகவர்களுக்கும்
இவளே தாய்.
பல நிறுவனங்களில்
பங்குகள் வாங்கி
அந்த நிறுவனங்களுக்கு
பாலூட்டி மகிழும் தாய்.
அரசாங்கத்திற்கும்.
நாட்டு நலத்திட்டங்களுக்கும்.
மக்கள்நலனுக்கான
மகத்தான திட்டங்களுக்கும்,
தனது உதிரத்தைக் கொடுத்து
உதவிவரும் தாய்.
பணத்தேவைக்காக
பரிதவித்து நின்ற
பல்வேறு மாநில அரசுகளுக்கு
பாகுபாடின்றி
பல நேரங்களில்
பணத்தை வாரிவழங்கிய
வாஞ்சையுள்ள
வள்ளல் இந்த தாய்.
மக்களின்
அடிப்படைத்தேவைகள்
உணவு, உடை, உறைவிடம்.
இந்த மூன்றிலும் என்
எல்ஐசித்தாயின் பணம்
பரவலாக படர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு இந்தியனின்
மூச்சிலும் பேச்சிலும்
முழுமையாய்
நிறைந்திருப்பவள் என் தாய்.
இருபத்தைந்து கோடிக்கும்
மேல் எண்ணிக்கையிலுள்ள
வாடிக்கையாளர்களின்
29 கோடி பாலிசிகள் மூலம்
திறம்படத் திரட்டிய
பணத்தை,
சேமிப்பை,
முதலீட்டை,
திறமையாகப் பாதுகாத்து
அவர்களின் பணத்தை
குறித்தநேரத்தில்
குறிப்பிட்டநபர்களுக்கு
குறிப்பிட்ட முறையில் வழங்கி
அவர்களை மகிழ்வித்து
தானும் மகிழும்
பொறுப்பான தாய் இவள்.
25 லட்சம் கோடிக்கு மேல்
இருக்கிறது இவளது
சொத்துக்களின் மதிப்பு.
சமூக அக்கறையோடு
படிப்பில் சிறந்த மாணவச்செல்வங்களின்
உயர் கல்விக்கு
உதவித்தொகை வழங்கும்
கருணைத்தாய் இவள்.
இவளுக்கு நிகர்
இப்பூவுலகில்
இவள் மட்டுமே.
இந்த அருமைத்தாயால்
இந்தியாவிற்கே பெருமை.
இந்தத்தாயின் அன்பில்
அரவணப்பில் ஆதரவில்
உயர்ந்தவன் என்பதால்
எனக்குப்பெருமை.
இந்த பெருமைத்தாய்
பிறருக்கு
ஒரு பொறாமைத்தாய்.
இந்த அருமைத்தாய்
அறுபத்தோரு
ஆண்டுகளுக்கு முன்
உதித்த உன்னத நாள்
இன்றுதான்.
என்றும் என் தாயவள்
பதினாறு வயதுத்துள்ளலோடு
பாரினில் பகட்டோடு
பவனிவரவேண்டும்.
இவளது
புகழும் பெருமையும்
உலகம்முழுக்க
உலாவரவேண்டும்.
என் தாய் மொழி
தமிழைப்போல்
இனிமையோடும்
இளமையோடும்
என்றென்றும் திகழ்ந்து
சிறக்கவேண்டும்.
இந்த பெருமைமிகு
தாயை இவளது
பிறந்தநாளான இன்று
வணங்கி மகிழ்கிறேன்.