நம் தாய்த்திருநாடு..
வெள்ளையர்களிடமிருந்து
விடுதலை பெற்று
நம்மை நாமே ஆண்டுகொள்ள
அனுமதி கிடைத்த
திருநாள் இன்று.
எழுபது ஆண்டுகளில் தான்
எவ்வளவு வளர்ச்சி..
எத்தனை உயற்சி..
நாம் சந்தித்த
தடைகளை எல்லாம்
தகர்த்தெறிந்து
முன்னேற்றப்பாதையில்
முழுவேகத்தில்
நடைபோடுகிறோம்.
நமக்குள்
மொழியால்
மதத்தால்
இனத்தால்
சாதியால்
பணத்தால்
நிறத்தால்
பழக்கவழக்கத்தால்
பல வேறுபாடுகள்
நிறைய இருந்தாலும்
பாரதத்தாயின் தவப்புதல்வன்
என்ற மந்திரவார்த்தை
நம் அனைவரையும்
ஒன்றிணைக்கின்றன.
இனி வரும்
ஆண்டுகளிலும்
சகோதரப் பாசத்துடனும்
சமய நல்லிணக்கத்தோடும்
சமத்துவ எண்ணத்துடனும்
சாதி வேறுபாடு ஏதுமின்றி
கைகோர்த்து பயணித்து
பாரதத்தை உயர்த்த
உறுதி பூணுவோம்.
வாழ்க தாய்த்திருநாடு.
உயர்க பாரதத்திருநாடு.
அனைவருக்கும்
சுதந்திரத்திருநாள்
நல் வாழ்த்துக்கள்.
பானா.ஈனா
No comments:
Post a Comment