Thursday, 17 May 2018
வார்த்தைகள்...அவை காந்தம்
வசியப் படுத்துவோம்..வசப்படுத்துவோம்
யாருக்கு யார் முகவரி...?
நான் 1992-94 ல்
புண்ணிய நகரமான
திருச்செந்தூர் கிளையில்
கிளை மேலாளர்.
எனது பதவிக்காலத்தில்
கிளை இரண்டாகப்பிரிந்தது.
அக்டோபர் மாதம்
ஒரு நல்லநாளில்
ஸ்ரீவைகுண்டத்தில்
புதிய கிளை
துவக்கிவைக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டத்தை
தனிக்குடித்தனம்
வைத்தபிறகு திருச்செந்தூர்
சிறிய கிளையாகிவிட்டது.
123 முகவர்கள் மட்டுமே
எங்களிடம்.
1994ல்
நான் மாற்றலாகிச்
செல்லும்போது
225 முகவர்கள்.
அனைத்து
முகவர்களின்
இல்லங்களும்
எனக்குத் தெரியும்.
அவர்கள் பற்றிய
எல்லா விவரங்களும்
எப்போதும் என்
விரல் நுனிகளில்.
அவர்களோடு எப்போதும்
நல்ல நெருக்கமான
உறவு.
சிற்றூர்களில் இருக்கும்
முகவர்கள் அனைவரும்
நம் மீது பாசத்தை
பொழிவார்கள்.
திருச்செந்தூருக்கு அருகே
நடுநாலு மூலைக்கிணறு
என்ற ஒரு சிற்றூர்.
அங்கு பாலசுப்பிரமணியன்
என்ற கிராமிய தொழிற்முறை
முகவர் ஒருவர்.
அவரது முகவர்
அடையாள எண்..7005-74B.
இன்றைய வடக்கு மண்டல மேலாளர்
திரு குமார் சார் அவர்கள்
கிளைமேலாளராக இருந்தபோது
முகவராக நியமனமானவர்.
இவரை முகவர் பணியில்
அமர்த்திய வளர்ச்சி அலுவலர்
திரு ஆனா.கூனா என்பவர்.
அவர் மதுரைக்கு
மாற்றலாகிச்சென்றதும்
நேரடி முகவராக
தொடர்ந்தார்.
திரு அண்ணாத்துரை என்ற
(அடையாள எண்..777-75)
புதிய வளர்ச்சி அலுவலரோடு
இவரை இணைத்துவிட்டேன்.
அவருக்கு சைக்கிள் ஒன்று
இருந்தால் வணிகத்திற்கு
நல்ல வாய்ப்பாக இருக்கும்
என்று நினைத்தேன்.
அவர் புதிய சைக்கிள்
வாங்கி வணிகத்திற்கு
பயன்படுத்த
வட்டியில்லாத
முன் பணம் கொடுக்க
அனுமதி அளித்தேன்.
சைக்கிளும் வாங்கினார்.
வாங்கிய சைக்கிளை
அவர் அப்படியே
பயன்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அவரோ
அந்த சைக்கிளின்
செயின் கவரில்
" எல்ஐசியின்
நிதியுதவியால்
வாங்கியது "
என்று பெயிண்டால்
எழுதிவைத்தார்.
கடன் வாங்கி
வாங்கிய வண்டி என்பதை
மரியாதைக்குறைவாக
நினைக்காமல்
"எல்ஐசியின் பிரதிநிதி"
என்று பெருமையுடன் ஒரு
அங்கீகாரம் தேடி தனது
வணிக வளர்ச்சிக்கு
பயன்படுத்தினார்.
சனிக்கிழமை தோறும்
வளர்ச்சி அலுவலர்
திரு அண்ணாத்துரையுடன்
வணிக சுற்றுப்பயணம்
மேற்கொள்வேன்.
ஒருநாள் இந்த
பாலசுப்பிரமணியன்
என்னிடம் வந்து
" மேலாளர் ஐயா..
என் வீடு சிறிய வீடு.
உங்களை என்
வீட்டிற்கு உள்ளே
வரவழைத்து உபசரிக்க
வசதிகள் இல்லை.
ஆனாலும்....
உங்களது ஒவ்வொரு
பயணத்தின் போதும்
எனது சிற்றூருக்கு
கண்டிப்பாக வாருங்கள்.
உங்கள் அம்பாசிட்டரை
அருகிலுள்ள
பொது மைதானத்து
மரநிழலில் நிறுத்துங்கள்.
பிறகு எனது வீ்டு
வரைவாருங்கள்.
உங்கள் வருகையை
எனக்குத்
தெரியப்படுத்துங்கள்.
உங்களோடு நானும்
கார் நிறுத்தப்பட்டிருக்கும்
மைதானம் வரை
நடந்து வருகிறேன்.
என்னுடன் ஒரு
ஐந்து நிமிடம் மட்டும்
நன்றாகப்பேசி விட்டு
திரும்பிப்போங்க.
எனக்கு இது போதும்.
இது மட்டும் போதும்.
எனது சிற்றூரில்
நான் பெரிய
எல்ஐசி முகவர்
என்ற நன்மதிப்பு
எனக்குக் கிடைக்கும்.
மக்கள் என்னை
உறுதியாக நம்புவார்கள்.
நானும் எனது வணிகத்தை
பெருக்கிக்கொள்வேன்.
ஏற்கனவே எல்ஐசி
முத்திரை பதித்த
சைக்கிள் என்மீது
நல்ல நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளது."
என்று கூறினார்.
முகவர் விருப்பப்படியே
சனிக்கிழமை தோறும்
அவர் இல்லம் செல்வோம்.
அப்போதே அவருக்கு
அடுத்தடுத்து நான்கு
குழந்தைச்செல்வங்கள்.
முகவர்களுக்கு
"உங்களால் முடியும்"
"உங்களாலும் முடியும்"
"உங்களால் மட்டுமே முடியும்"
என்பன போன்று பல
உற்சாகந்தரும்
வரிகளை
15 பைசா செலவில்
அஞ்சலட்டையில்
நான் வாரந்தோறும்
எழுதி அனுப்புவது
வழக்கம்.
முகவரின் மூத்தபையன்
இந்த அஞ்சலட்டைகளை
கவனமாக படித்திருக்கிறான்.
நான் முகவரின் வீட்டை
நெருங்கியதுமே
"உங்களால் முடியும்" சார்
வந்திருக்காங்க என்று
உரக்க ஒலித்துக்கொண்டே
உள்ளே ஓடுவான்.
முகவர் மகிழ்ச்சியுடன்
வெளியே வருவார்.
மரத்தடிக்கு திரும்பி
வருவோம்..
மரத்தடியில் நின்று
சிறிது நேரம்
பேசி விட்டுச்செல்வது
வாடிக்கையாகிப்போனது.
எங்களின் இந்த செயல்
முகவருக்கு செல்வாக்கை
உயர்த்த உதவியது.
முகவரும் வணிகத்தில்
கொடிகட்டிப் பறந்தார்.
நான்கு ஆண்குழந்தைகள்.
இரண்டு பெண்குந்தைகள்.
இவர்களை வளர்த்து
ஆளாக்கி உயர்த்த
உதவியது எல்ஐசி தான்
என்று நம்பி மகிழ்கிறார்.
சைக்கிள் வாங்கியது
வணிக வளர்ச்சியில்
தனக்கு ஒரு திருப்புமுனை
என்று நினைக்கிறார்.
வாடிக்கையாளருக்கு
முகவரைத்தான்
நன்றாகத்தெரியும்.
அவர் சொல்வதைத்தான்
வாடிக்கையாளர்
கேட்கப்போகிறார்.
இது முகவருக்கு
நன்றாகத்தெரியும்.
இருந்தாலும் தனக்கு
ஒரு ஆங்கீகாரம் வேண்டும்,
தன்மீது நம்பகத்தன்மை
ஏற்படவேண்டும்,
என்பதற்காகவே
எல்ஐசி அலுவலர்கள்
அருகிலிருக்கவேண்டும்
என்று முகவர்
நினைக்கிறார்.
இது முற்றிலும்
உண்மைதானே.
எங்கெல்லாம்
கிளை அலுவலர்கள்
முகவர்களுக்கு
அங்கீகாரத்தையும்,
பெருமையையும்
பெற்றுத்தருகிறார்களே
அங்கெல்லாம் வணிகம்
மழையாய் கொட்டும்.
கிளையின் வளர்ச்சி
எப்போதும் உச்சத்திலேயே
இருக்கும்.
எல்லோருமே வளர்ந்து
உயரலாம்.
எல்ஐசிக்கு
முகவரே முகவரி.
முகவருக்கும்
எல்ஐசியே முகவரி
கடைசிவரை இருந்தால்தான்
பழையது வேண்டுமா?
பாளையங்கோட்டையில்
எனது உறவினர் ஒருவர்.
ஏறத்தாழ எனது வயதுதான்.
எனக்கு நல்ல நண்பரும்கூட.
அவரது குடும்பம் பாரம்பரியம்
மிக்க குடும்பம்.
பழம் பெருமை பேசிக்கொண்டே
இருப்பார்கள்.
நண்பர் ரம்மி விளையாட்டில்
வல்லவர்.
ஞாயிறுதோறும் தவறாமல்
யார் வீட்டிலாவது வைத்து
ரம்மி ஆட்டம் உண்டு.
ஒரே வீட்டில் வைத்து
விளையாடினால் வீட்டம்மா
திட்டுவார்கள் என்று
ஒவ்வொரு ஞாயிறும்
வெவ்வேறு நண்பர்கள்
வீட்டில் வைத்து நாள்முழுதும்
நடைபெறும்.
யார் வீட்டில் வைத்து
ரம்மியாட்டம்
நடைபெறுகிறதோ அவர்
வீட்டில் மதிய விருந்து
அவரது முழுச்செலவில்.
என் நண்பர் தனது
வீட்டம்மாவிற்கு பயந்தவர்.
அதனால் ரொம்ப காலம்
அவர்வீட்டில் வைத்து சீட்டாட
அவர் தட்டிக்கழித்து வந்தார்.
நண்பர்கள் எல்லோரும்
ஒன்றாகச்சேர்ந்து நண்பரிடம்
"இந்த முறை கண்டிப்பாக
உங்கள் வீட்டில் வைத்துத்தான்
சீட்டு விளையாட்டு"
என்று அடித்துக்கூறிவிட்டனர்.
நண்பருக்கு தர்ம சங்கடம்.
நண்பர்களையும்
சமாளிக்கவேண்டும்.
வீட்டில் மனைவியையும்
சமாளித்து சம்மதம்
பெறவேண்டும்.
நண்பர் வீட்டம்மாவிடம் சென்று
"ஞாயிற்றுக்கிழைமை காலையில்
நண்பர்கள் பொழுதுபோக்க
நமது வீட்டிற்கு வருகிறார்கள்"
என்று பணிவாகக் கூறுகிறார்.
மனைவியும் மறுப்பேதும்
கூறவில்லை.
இதுவே நண்பருக்கு
மகிழ்ச்சியைத்தந்தது.
"மதிய உணவு நம் வீட்டில்"
என்று சொன்னதும் மனைவி அதற்கும்
"சரி ....நல்லது...
பழையதுதான் போடுவேன்
பரவாயில்லையா" என்கிறார்.
நண்பர் தனது மனைவி
விளையாட்டாகப்பேசுவதாக
நினைத்துக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
ஒருநாளும் காய்கறி வாங்க
சந்தைக்கு செல்லாத நண்பர்
அன்று காலையிலேயே
சந்தைக்குச்சென்று
நிறைய காய்கறிகள் வாங்கி
மனைவியிடம் தருகிறார்.
பத்துமணிவாக்கில்
நண்பர்கள் கூட்டம் வருகிறது.
மனைவி அவர்களை
மகிழ்ச்சியுடன் வரவேற்பதை
நண்பர் பார்க்கிறார்.
உடனே மனைவியை
அடுக்களையில் சந்தித்து
"நிறைய கறிவகை களுடன்
சாப்பாடு தயாரித்து வைம்மா"
என்று கேட்டுக்கொள்கிறார்.
அவரது வீட்டம்மாவும் அவரிடம்
"நீங்க கவலைப்படாம போங்க
நல்லபடி பழையது கிடைக்கும்"
என்று சொல்கிறார்.
நண்பர் மனைவியைப்பார்த்து
"விளையாடாதே அம்மா..
நான் அவர்கள் வீட்டிற்கு
சென்றபோதெல்லாம்
அந்த வீட்டு அக்காமாரெல்லாம்
வகை வகையாக செய்து
போட்டிருக்கிறார்கள்.
நம்ம வீட்டில் உணவு சரியில்லை
என்றால் என் மானத்தை
வாங்கிவிடுவார்கள். காப்பாத்து"
என்று கெஞ்சுகிறார்.
"நீங்க போய் நிம்மதியா
சீட்டு விளயாடுங்க" என்று கூறி
அனுப்பிவைக்கிறார்.
நண்பர் சீட்டு விளையாடும்போது
ஒரு வித பதட்டத்துடனேயே
காணப்படுகிறார்.
மதியம் ஒரு மணியானதும்
சாப்பாட்டு இடைவேளை
அறிவிக்கப்படுகிறது.
சாப்பாடு பரிமாறுவதற்கு முன்
அடுக்களைக்குச்சென்று
"எல்லாம் நல்லபடி முடிந்ததா"
என்று மனைவியிடம் கேட்கிறார்.
மனைவியும்
"எல்லாம் அருமையாக முடிந்தது"
என்று கூறிவிட்டு
"பழையதை பரிமாறவா"
என்றும் கேட்கிறார்.
நண்பருக்கு
அடிவயிற்றைக் கலக்குகிறது.
நடப்பது நடக்கட்டும் என்று
நண்பர்களுடன் சாப்பாட்டிற்கு
அமர்கிறார்.
சாப்பாடு பரிமாறப்படுகிறது.
சொதி, இஞ்சிப்பச்சடி,
உருளைக்கிழங்கு பொறியல்,
வடை, பருப்பு பாயசம்
என தடபுடல் விருந்து.
நண்பர்கள் சாப்பாட்டு
ருசியை பாராட்டி பாராட்டுமழை
பொழிகிறார்கள்.
விருந்து முடிந்ததும் நண்பர்களை
மாடிக்கு அனுப்பிவிட்டு நண்பர்
மனைவியிடம் செல்கிறார்.
"நல்ல ருசியான சமையலை
செய்து வைத்துவிட்டு பின்
ஏனம்மா என்னிடம் பலமுறை
பழையது பழையது
என்று சொல்லி பயமுறுத்தினாய்"
என்று கேட்கிறார்.
இப்போதும் மனைவி
"நான் சமைத்த்தும் பரிமாறியதும்
உண்மையிலேயே பழையது தான்"
என்று அடித்துச் சொல்கிறார்.
நண்பர் "எப்படி ம்மா"
என்றுகேட்கிறார்.
"உங்க தாத்தா
குப்பாம்பிள்ளைக்கு
பத்து ஏக்கர் விவசாய நிலமும்
பத்துகிலோதங்க நகைகளும்
இருந்தன,
அவர் இறந்துபோகும் போது
ஐந்து ஏக்கர் விவசாய நிலமும்
ஐந்து கிலோ தங்கநகைகளும் தான்
உங்க அப்பா சுப்பையா பிள்ளை
கைக்கு வரும்போது இருந்தன.
அவங்க காலத்துக்குப்பிறகு
ஒங்க கைக்கு வரும்போது
விவசாய நிலம் ஒரு ஏக்கராகவும்
தங்க நகைள் 50 பவுனாகவும்
கொறைஞ்சு போச்சு.
சொடலையாபிள்ளையான
உங்களிடமிருந்து
என் மகன் எசக்கிக்கு எதாவது
கிடைக்குமான்னும் தெரியல.
அவன் படிச்சு எல்ஐசியில
வேலைபார்ப்பதால்
எனக்கு பெரிய நிம்மதி.
சும்மா ஒக்காந்தே தின்றால்
இப்படித்தானே ஆகும்.
நீங்களோ உங்க அப்பாவோ
ஒங்க சம்பாத்தியத்திலிருந்து
குடும்ப சொத்தோடு
ஒரு பைசாவாவது சேர்த்து
வைத்திருக்கிறீர்களா?
உங்க தாத்தா சம்பாத்திச்ச
பழைய சொத்திலிருந்துதான்
இப்போது சோத்தை
நாம் சாப்பிடுகிறோம்.
அதனால்தான்
உங்கள் நண்பர்களுக்கு
பரிமாறியது பழையது என்று
மீண்டும் மீண்டும் கூறினேன்."
மனைவி சொன்னதைக்கேட்ட
நண்பருக்கு செருப்பால
அடிச்சமாதிரி இருந்தது.
65 வயதுக்குமேல்
அவரால் இனி என்ன
பண்ண முடியும்.
மனைவி சொன்னதை
பொறுமையாகக்
கேட்டுக்கொண்டார்.
உள்ளுக்குள் அழுது
தனது ஆற்றாமையைத்
தீர்த்துக் கொண்டார்.
இயலாமையை நினைத்து
நொந்து கொண்டார்.
நம்ம முகவர்கள் சம்பாதிக்கும்
புது வணிக வருமானமும்
முன்பு செய்த வணிகத்திற்காக
கிடைக்கும் தொடர் வருவாயும்
பழையதும் புதிய உணவும் கலந்த
ஒரு கலவை தான்.
முகவர்கள் முன்பு செய்த
வணிகத்தில் தொடர்ந்து
கிடைப்பது தான்
ரின்யூவல் கமிஷன் என்ற
பழையது.
ஏனென்றால் முகவருக்குப்பின்
இது குடும்பத்திற்குத்தானே
தவறாமல் போகிறது.
என்னுடைய கருத்துப்படி
முகவருக்குப் போகும்
•ரின்யூவல் கமிஷன்•
முகவரது குடும்பத்தின் சொத்து.
இது அவர்களின் பழையது.
இதில் கை வைக்க
முகவருக்கு எந்த
உரிமையும் கிடையாது.
குடும்பச்செலவிற்கு அவர்
புது வணிகம் மூலம் வருகின்ற
முதல் வருட கமிஷனை மட்டுமே
பயன்படுத்தவேண்டும்.
அதற்காக அவர் தொடர்ந்து
உழைக்கவேண்டும்.
உழைத்துக்கொண்டே
இருக்கவேண்டும்.
அவருக்கு ஓய்வே
கிடையாது.
பழையதைத்தொடாமல்
புதிய உணவையே
அருந்தவேண்டும்.
சரிதானா
நண்பர்களே.
Sunday, 6 May 2018
இங்கேயும் கொண்டாடுகிறோமே?
UAE யில் இன்றைய
நாளிதழ்களின்
தலைப்புச்செய்தி யே
இதுதான்..
UAE கூட்டு அரசாங்கத்திலும்
ஏழு தனித்தனி அமீரகங்களிலும்
பணிபுரியும் ஊழியர்களுக்கு
ஒரு மாத அடிப்படைச்சம்பளம்
சிறப்பு போனசாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களிலும்
இராணுவத்திலும்
பணியாற்றும்
ஊழியர்கள். மற்றும்
ஓய்வூதியர்கள் பயனடைவர்.
சமூகப்பாதுகாப்பு திடங்களில்
உதவி பெற்றுவரும்
பயனாளிகளுக்கும்
இத்தொகை கிடைக்கும்.
இந்த தொகை ரம்சான்
பண்டிகைக்கு முன்னரே
வழங்கப்பட வேண்டும் என
உத்தரவிடப்பட்டுள்ளது.
மைய அரசாங்கம் கொடுக்க
போனஸ் தொகை
மட்டும் இந்திய மதிப்பில்
ரூ.1900 கோடியாகும்.
தனித்தனி யாக அமீரகங்கள்
அவரது ஊழியர்களுக்கு
வழங்கும் போனஸ் மதிப்பு
இதில் சேர்க்கப்படவில்லை.
ஆங்கில ஏகாபத்தியத்திலிருந்து
விடுபட்டு தன்னாட்சி அமைப்பாக
2-12-1971 ல் UAE யாக
செயல்படத்துவங்கியபோது
முன்னின்று வழிநடத்தியவர்
மன்னர் ஷேக் சயீது அவர்கள்.
ஐக்கிய அமீரகத்தை
உலகின் முன்னணி இடத்திற்கு
கொண்டுவர திட்டங்கள் தீட்டி
அவற்றை வெற்றிகரமாக
செயல்படுத்திக்காட்டிய
சிற்பி அவர்.
அவர் பிறந்த
நூறாவது ஆண்டினை
மக்களின் ஈடுபாட்டுடன்
நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்கள்.
வழங்கியே பழக்கப்பட்ட
வள்ளலின் அடையாளம்
அந்த மன்னர் ஷேக் சயீது.
அவரது
மறைவிற்குப்பின்னரும்
அனைவரையும்
உற்சாகப்படுத்திக்கொண்டு
அவர்களின் உள்ளங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
இவரது நூற்றாண்டு
விழாக்கொண்டாட்டத்தின்
ஒரு அம்சமாகத்தான்
அரசாங்கம் தனது
தங்க நிகர் அங்கங்களுக்கு
இந்த போனஸ் அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
சரி..சரி..
நூற்றாண்டு விழாக்
கொண்டாட்டத்தை முன்னிட்டு
அந்த நாட்டில்
நாட்டின் முன்னேற்றத்திற்கு
பங்களிக்கும் ஊழியர்களுக்கு
போனஸ் வழங்குகிறார்கள்.
நம்மூர்ல நூற்றாண்டு விழாக்
கொண்டாடும்போது
கொலை, கொள்ளை யில்
ஈடுபட்டு சிறைகளில்
தண்டனை பெற்றுவருபவர்களை
விடுதலை செய்கிறார்கள்.
முன்னேறிவிடும்
நம்ம நாடு..