சும்மா போனவன
வம்புக்கு கூப்புட்டு
இந்த எசக்கி பயா ஏங்கிட்ட
"யோவ்..சொடல..
இன்னக்கி பேப்பர
பாத்தேராவே...
நம்ம மொதலமைச்சரு
சேக்காளி மந்திரிமாரோட
மயிலாடுதுறையில
காவிரியில குளிச்சாவொளாமே
படிச்சேராவே" ன்னு
கேட்டான்.
"படிக்காம இருப்பேனால...
எல்லா பேப்பர்காரனுவனும்
அந்த படத்தைத்தான
போட்டுருக்கானுவொ" ன்னு
பதிலு சொன்னேன்.
அப்பவும் எசக்கிப்பயா
என்ன விடல.
"நம்ம பொறுப்பு ராவு
அங்க ஏன் குளிக்கலன்னு
ஒமக்கு தெரியுமாவே" ன்னு
குசும்பா கேட்டான்.
"நான் என்ன
எளவை கண்டேன்.
ஒருவேளை அவொளுக்கு
பம்பாயில வேற வேல
எதாவது இருந்திருக்கலாம்.
நீ என்னடே நெனய்க்கேன்னு
சும்மா சொல்லுடே"ன்னு
கேட்டேன்.
அதுக்கு இந்த எசக்கி
பயா..
"போரும்வே கூ முட்டை...
அவொ மட்டும்
குளிச்சிருந்தாவொன்னா
மேக்கப்பு, மீசை மை
இதுல்லாம் தண்ணியில கரைஞ்சி போயிருக்கும்..
சாயம் வெளுத்திருக்கும்
அதுக்கு பொறவு
அவொள ஒருத்தனுக்கும்
அடையாளம் தெரியாம
போயிருக்கும்.
நல்ல வேள அவொ
குளிக்க வரலே
இது புரியாம
நீரு என்னத்தவே
கிளிய்க்கேரு" ன்னு
வெளக்கஞ்சொன்னான்.
எம்புட்டு ஆராய்ச்சி
பண்ணியிருக்கான்
இந்த எசக்கி பயா..??
பாத்தேளாய்யா?
No comments:
Post a Comment