வீட்டுல ஒரே எடத்துல
அசையாம ஒக்காந்துகிட்டு மொபைலயே நோண்டிட்டு இருக்கதுக்கு பதிலா
வெளியே கொஞ்சநேரம் காத்தாட போயி இன்னைய்க்கு எப்படியாவது
ஆதார் வேலையை
முடிச்சிட்டுவாங்கன்னு
வீட்டம்மா உத்தரவு.
அதுனால ஒரு பதினோரு
மணிவாக்குல ஸ்ரீரங்கம்
பொது மருத்துவமனைக்கு
எதுருல உள்ள பழைய
கட்டுடத்துல இருக்க ஆதார்
மையத்துக்கு போனேன்.
வெளிய ஒக்காந்துக்கிட்டு
நெறையவேருக்கு மனு
எழுதிக்கொடுத்துக்கிட்டு
ஒரு மனுசன் இருந்தாரு..
அவர்ட்டபோயி இப்பிடி
BSNL நம்பரோட ஆதாரை
இணய்க்கமுடியல.
ரேகை ஒத்துப்போவலைன்னு
சொல்லுதாவொ. இதுனால
இங்க ரேகையை யும்., கருவிழி
பிம்பத்தையும் திரும்ப எடுப்பாங்களான்னு கேட்டேன்.
அவரு அண்ணாச்சிக்கு
திருநெவேலியா ன்னு கேட்டுட்டு
இங்க எடுப்பாவொ.
அதுக்குப்பதுலா நீங்க ஆன்லைன்ல
போயி மொபைல் நம்பரை
மாத்திக்குடுத்து பாருங்க
சிக்கல் சரியாப்போயிரும் னு
சொன்னாரு. நான் கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கன்னு
கேட்டதுக்கு, ஒங்களுக்கு வெளங்கலயா?
நீங்க உள்ளயே போயி புதுசாவே எடுத்துக்குங்கன்னு எரிச்சலோட
சொல்லிட்டாரு.
நானும் சரிதாம் போறும்வேன்னு
மனசுக்குள்ள சொல்லிட்டு உள்ள
போனேன்.
ஐஞ்சாறுபேரு
நின்னாவொ.
ஒருத்தரும் வரிசையா நிய்க்கல.
அங்க ரெண்டு பேரு
படம் எடுக்கதுக்காக இருந்தாவொ.
எல்லாரையும் எரிச்சலோட
வெரட்டிக்கிட்டே பேசுனாவொ.
நேத்து BSNL ல் கெடச்ச
அன்பான வரவேற்பையும்
இங்கு நாயை வெரட்டுத மாதிரியான
வரவேற்பையும்
ஒப்பிட்டு பார்த்தேன்.
ஒரு 90 வயது உள்ள ஒரு
மூதாட்டியை தூக்கிட்டு வந்து
ஒக்காரமுடியாதவொள
கஷ்டப்பட்டு ஒக்காரவச்சு
அவொள பாடாப்படுத்தி
போட்டோ எடுத்தாவொ.
ரேகையும் பதிஞ்சாவொ.
பாவமா இருந்துச்சு.
அரசாங்கத்து மேல
கோவம்கோவமா வந்துச்சு.
நான் போயி என்னொட
பிரச்சினைய சொன்னேன்.
சேர்ல ஒக்காருங்கன்னு
ஒரு அதட்டல்.
கண்ணாடியை
களத்திவைங்கன்னு ஒரு கத்தல்.
ஒருபடியா போட்டோ எடுத்து
முடிச்சாச்சு.
அப்பறம் கருவிழியை
பதிஞ்சாவொ.
அடுத்தாப்ல எந்திரிச்சு
இங்க வாங்கன்னு
எரிச்சலோட சொன்னாவொ.
இடது கையோட நாலு
வெரல ஒரு கண்ணாடி மேல
வைக்கச்சொன்னாவொ.
ரேகை சரியா வரல.
வெரலை தொடச்சிட்டு
திரும்ப வைக்கச்சொன்னாவொ.
ஒரு வழியா பதிஞ்சுது.
அடுத்தாப்ல வலது கையி்ல உள்ள
நாலு வெரலை
வைக்கச்சொன்னாவொ.
சரியா ரேகை தெரியல.
அந்த கண்ணாடிய அவொ
வச்சிருந்த கைக்குட்டையால
தொடச்சுட்டு திரும்ப
வெரலை வைக்க சொன்னாவொ.
அப்பவும் ரேகை சரியா தெரியல.
வெரல்களை
மொகத்துல நல்ல தடவிட்டு திரும்ப
வைக்கச்சொன்னாவொ.
இந்த தடவை ஓரளவு தெரிஞ்சுது.
அடுத்தாப்புல இரண்டு கைகளோட
பெருவிரல்களை சேந்தமாதிரி
கண்ணாடி மேல வைய்க்கச் சொன்னாவொ.
ரெண்டு தடவை வச்சுப்பாத்தும்
சரியா வரல.
மூணாவது தடவை
சரியா வந்துட்டுன்னு சொன்னாவொ.
ஒடனே ஒரு ஒயரை
களத்திப்போட்டுட்டு
இன்னோரு ஒயரை
லேப்டாப்புல மாத்துனாவொ.
ஒடனே ஒரு பேப்பரை
வச்சு அச்சடிக்க ஒரு
பட்டனை தட்டுனாவொ.
ஒரு காயிதத்துல என்னோட
வெவரம் அச்சாயி வந்துச்சு.
இப்பந்தான் தெரிஞ்சுச்சு
அவொள்லாம் ஏன் எரிஞ்சுவிளுதாவொன்னு.
பின்ன இவ்வளவு பாடு படுத்துனா
அவொளும் கோபப்படாம என்ன
பண்ணுவாவொ.
அடுத்தாப்ல ஒரு முப்பது ரூபாய்
கேட்டாவொ.
கொடுத்தேன்.
என்னைமாதிரியே எல்லாரும்
முப்பது ரூபாய் கொடுத்தாவொ.
ஆனா ஆதார்கார்டு எடுக்கிறது
இலவசம்னு அரசாங்கம்
சொல்லுது.
ஆனா நடைமுறையில
அப்பிடி இல்லை.
நான் மட்டுமா
கொடுத்தேன்
எல்லாரும் தான்
கொடுத்தாவொங்கிறதுல
எனக்கு சந்தோஷந்தான்.
ஆதார் பிரச்சினையில
நான் புரிஞ்சிக்கிட்டது...
விரல்களை வைக்கும்
கண்ணாடி அட்டை
அழுக்குப்படிஞ்சும்
தூசி படிஞ்சும் இருப்பதும்
அதை மீண்டும் ஒரு அழுக்கு
துணியை வச்சே தொடய்க்கிறதும்
தான் ரேகையை சரியா
பதிவு பண்ணாம போறதுக்கு
காரணம்.
ஏன் முப்பது ரூபாய்
வாங்குனாவொங்கிறதும்
தெரியல.
அரசாங்கத்துக்குத்தான் போய்ச்சேருதுன்னா
சந்தோஷம் தான்..
ரசீது இல்லங்கிறதால
யாரோ ஒரு மகானுக்குதான்
போவுதுன்னு நெனய்க்கேன்.
நீங்க எப்படி நெனைய்க்கேளோ?
No comments:
Post a Comment