இரண்டு இடங்களில்
முடியாமல் போய்விட்ட
BSNL கைபேசி எண்ணுடன்
ஆதார் இணைப்பிற்காக
இன்று திருச்சி மேல அரண்
சாலையில்
சிங்காரத்தோப்பு
பகுதியில் உள்ள
BSNL அலுவலகத்தின்
வாடிக்கையாளர்
சேவை மையம்
சென்றிருந்தேன்.
அங்கிருந்த ஊழியர் /அலுவலர்
திரு வேல்முருகன்
அன்புடன் வரவேற்று
பணியைத்தொடங்கினார்.
ஆட்காட்டி விரலை
ரேகை பதியும்
பட்டையில் வைத்தேன்.
அது ஒத்துவரவில்லை.
அடுத்து நடுவிரல்.
அதிலும் தோல்வியே.
அடுத்து பெருவிரல்.
அதே முடிவுதான்.
அந்த அலுவலர்
கொஞ்சம் கூட
அசரவில்லை.
சிடுசிடுக்கவில்லை.
கடுகடுப்பாக
பேசவில்லை.
மாறாக புன்முறுவலுடன்
வேறு விரல்களையும்
பார்த்துவிடலாம் என
பொறுமையாக பேசினார்.
மோதிர விரல் ரேகையும்
ஒத்துப்போகவில்லை.
சுண்டு விரலும்
ஏமாற்றியது.
அடுத்தபடியாக
இடது கையின்
விரல்களையும் வைத்து
முயன்று பார்த்தார்.
முடிவு என்னவோ
ஏமாற்றம்தான்..
கருவியையும்
குற்றம் சொல்லமுடியாது.
ஏனென்றால் பிறருக்கு
விரல் களை ஆராய்ந்து
ரேகைகள் ஒத்துப்போகும்
தகவலை உறுதி செய்தது.
எங்கு குழப்பம்
என்பதை என்னால்
அறிந்துகொள்ள
முடியவில்லை.
இருந்தாலும் அந்த
BSNL அலுவலர்
திரு பாலமுருகன்
அவர்களின்
கனிவான பேச்சும்,
மென்மையான பணியும்
வாடிக்கையாளரிடம்
வெளிப்படுத்திய
கரிசனமும்
போற்றுதற்குரியது.
இந்த ஆதார் சிக்கலை
நான் வரும் நாட்களில்
சரிசெய்தாகவேண்டும்.
நாளை ஆதார்மையம்
சென்று ரேகைகளை
சரியாக்கவேண்டும்.
என்ன
ரேகை
படப்பிடிப்போ?
என்ன
ஒப்பிட்டுப்பார்த்தலோ?
என்னைப்போல்
எத்தனை லட்சம்பேரோ.?
நந்தன் நில்கேனிக்கே
வெளிச்சம்.
No comments:
Post a Comment