Thursday, 28 September 2017

தனியார்மயம்

என்னய்யா..
சொடல...

"BSNL நம்பரை
ஆதார்கார்டோட எணய்க்க
புது ஆதார்கார்டுக்கு
அலையா அலைஞ்சேர..
என்ன ஆச்சு.."

"புதுசா போட்டோ எடுத்தாச்சு.
விரல் ரேகை பதிஞ்சாச்சு..
கருவிழி பிம்பத்தை ஸ்கேன்
பண்ணியாச்சு.

இருவது நாளுகரகுள்ள
ஆதார் சர்வர்ல
ஏத்திருவாவொ..

இதுக்குப் பொறவு தான்
BSNL க்கு போவணும்."

" யோவ். சொடலை ..
இந்த தனியார் மயமாக்கல் னா
என்னன்னு கொஞ்சம்
எனக்கும் வெளங்குத மாதிரி
சொல்லுதேரா?"

"இதுல்லாம் புரியிறது
ஒண்ணும் கஷ்டம் இல்லடே"

"அப்பிடியா...
அப்பஞ்சொல்லுதேரா"

"அரசாங்கத்துலயோ
பெரிய கம்பனியிலயோ
நிரந்தரமா வேலைக்கு
ஆள் போட்டாவொன்னா
அவொளுக்கு மாசாமாசம்
சம்மபளம் கொடுக்கணும்.
வருசாவருசம்
இன்கிரிமண்ட் கொடுக்கணும்.
பென்சன் ஆகும்பொது
அவொளுக்கு
கிராச்சுட்சடி, PF பணம்,
இப்படி பலதுக்கும் நெறைய
பணம் கொடுக்கணும்.

இது போவொ
மாசாமாசம்
அவொ ஆயுசுக்கும்
பென்சன் கொடுக்கணும்.

அவொளோட
காலத்துக்குப்  பொறவு
அவொ  வீட்டம்மாவுக்கு
குடும்ப பென்சன்
மாசாமாசம் கொடுக்கணும்.

இதை ஓய்க்கணும்னுட்டு
நெரந்தரமா வேலய்க்கி
ஆளெடுக்காம
எதாவது தனியார்
கம்பேனி மூலமா
ஆளெடுப்பாவொ.

இதுல  தனியார்
கம்பெனிக்காரன்
ஒரு ஆளுக்கு
ஏழாயிரம் எட்டாயிரம்னு
கவர்மெண்டுல வேங்கிட்டு
ஆயிரமோ ரெண்டாயிரமோ
அவன் எடுத்துட்டு
மீதியை த்தான்
தொழிலாளிக்கு
கொடுப்பான்.

இப்பிடி வர ஆளை
எப்படி வேணாலும்
எப்படி வேணாலும்
வேலைக்கு
வச்சுக்கலாம்.

வேலையிருந்து
வெலக்கலாம்.

வேலைய்க்கு எந்த
உத்திரவாதமும்
கெடையாது.

வேலையில 
இருக்கும்போது
மண்டையப்போட்டுட்டா
பைசாக்காசு கூட
கெடைய்க்காது.

யாரும் யாருகிட்டயும்
எதுவும் கேக்கமுடியாது.

தனியார் ஏஜெண்டுக்கு
மாசாமாசம் பணம்
நெறையவே கெடய்க்கும்.

முந்தியில்லாம்
ஆஸ்பத்திரிக்கு போனா
நெரந்தர ஊழியர்கள்
நெறையபேரு
இருப்பாவொ.

இப்போ
யூனிபாரம் போட்டுக்கிட்டு
இந்த மாதிரி ஆளுவொ
நெறையபேரு
வேல பாத்துக்கிட்டு
இருக்காவொ.

கோயிலுக்கு போனாலும்
இப்பிடித்தான் 
நெறையபேரை கோயில்ல
பாக்கலாம்.

இதமாதிரிதான்
எல்லா எடத்துலயும்.

இதுக்கு  ஆளனுப்ப
பெரிய பெரிய கம்பெனி
பெரிய அளவுல
நடந்துகிட்டு இருக்கு.

அதை நடத்துததுல்லாம் 
பெரிய பெரிய அதிகாரிக்கும்
அரசியல் வாதிக்கும்
மந்திரிமாருக்கு ல்லாம்
வேண்டப்பட்டொவளா
இருப்பாவொ.

ஆச்சிமாறும் போது
கச்சி மாறும்.
ஆனாலும்
நடக்குற
காச்சி மட்டும்
மாறவே மாறாது.

இந்த நடத்துத
தனியாருங்கபாடு
கொண்டாட்டந்தான்.

மொதலுன்னு எதுவும்
போடாத தொழிலு..

கப்பம் மட்டும்
ஒளுங்கா கெட்டணும்.

இப்ப புரிஞ்சுதால
எசக்கி..
தனியார்மயம்னா
என்ன ன்னு"

"ஓரளவு புரிச்சுட்டுவே
சொடலை.
அப்பப்பம் இதமாதிரி
எதயாவது சொல்லும்யா.
மரமண்டய்ங்க நாங்க
எதோ கொஞ்சம்
தெரிஞ்சுக்கிறோம்"

"இன்னய்க்குப்பாத்து
ஏம்ல இந்த கேள்விய்க்கு
வெளக்கம் கேக்க"

"நான்
தற்செயலாத்தாம்வே
இந்த கேள்விய கேட்டேன்.
இன்னைய்க்கு எதும்
விசேஷமா?"

"இல்லை..
இன்னய்க்கு தான்
அந்த பெரிய ஆளு
ரிட்டயர் ஆவுதாராம்.
அதுக்காகத்தான்
குசும்புக்காவ
இந்த கேள்வியை
கேட்டியோன்னு
நெனைச்சுட்டேன்."

No comments:

Post a Comment