Sunday, 26 February 2017

இங்கு இல்லை..அங்கே இருக்கு

நான் வீட்டைப்பாத்து
வெரசலா போயிட்டிருந்தேன்.

அந்த கட  முக்குல நம்ம
சேக்காளி சொடல நிய்க்காம்.

பாத்துட்டாம்னா
அது எத்தன வகை
இது எத்தன வகன்னு
கழுத்த அறுத்திறுவாம்.

அதனால
இந்தப்பயட்ட மாட்டப்படாதுன்னுட்டு
சட்டுன்னு பக்கத்துலயிருந்த
முடுக்குல நொளஞ்சேன்.

அந்தப்பயா என்ன பாத்துட்டு
ஏல எசக்கி எங்கல போறன்னு
கூப்பாடு போட்டுட்டான்.

எல்லாருந் திரும்பிப்
பாக்காணுவளன்னுட்டு
ஏமுல கத்துத..ஒனக்கு
என்னவதாம்ல  வேணும்னு
கோவமா கேட்டேன்.

அதுக்கு அந்த பயா
நீரு  படிச்சவரு..
சந்தேகம் கேக்கலாம்னு
பாத்தா ரொம்பத்தான்
கிராக்கி பண்ணுதேரன்னு
சொன்னான்.

சரிடா..சொடலை..
அழுவாத..சந்தேகத்தை
கேளுன்னு சொன்னேன்.

"உள்ளூரிலேயே
வெல போகாதமாடு
எப்படி
வெளியூர்ல வெல
போகும்ங்கிற பழமொழிக்கு
என்னவே அர்த்தம்"னான்.

உள்ளூர்ல ஒரு பொருள்
வெல போகலன்னா அதுல
எதோ குத்தம் கொறை இருக்கும்.
அதுனால கண்டிப்பா வெளியூர்ல
வெல போறது கஷ்டம்னு
சொன்னேன்.

அந்தப்பயலுக்கு கோவம்
வந்துதே பாக்கணும்.

என்னவே இப்படி
கிறுக்குத்தனமா
மத்த பயலுவ
சொல்றமாதிரியே
சொல்றேரு..

இத நான்
ஏத்துக்கமாட்டேம்னான்.

ஏம்ல இப்படி சொல்லுதன்னு
கேட்டன்

அதுக்கு அந்தப்பயா
"அப்படின்னா
இந்த ஊர்ல  MP யாகமுடியாத
சு.திருநாவுக்கரசு, ப.சிதம்பரம்,
இல.கணேசன் இவங்கள்ளாம்
வேற ஸ்டேட்ல இருந்து எப்படில
MP ஆனாங்க"ன்னு
கேக்குறாம்யா?.

நான் என்னய்யா சொல்ல..

நாண்டுக்கிட்டு நின்னுதான்
சாவணும்.

யோசிச்சுப்பாத்தா அந்த
சொடல கேட்டது ஞாயந்தான்னு
தோணுது.

ஒங்களுக்கு?

No comments:

Post a Comment