Saturday, 4 March 2017

தானா வரும்.

எல்ஐசி
நெல்லைக்கோட்டத்தில்
உள்ள ஒரு கிளை.

அப்போது அந்தக்கிளை
மதுரைக்கோட்டத்தின்
வரம்பிற்குள் இருந்தது.

எனது நண்பர் ஒருவர்.
கணக்கு வழக்குப்
பிரிவுத் தலைவர்.

அனைத்து வேலைகளையும்
தானே பார்த்ததாக தம்பட்டம்
அடித்து மேலிடத்தில் நல்ல
பெயர் வாங்க முயற்சிப்பார்.

உண்மையிலேயே
உழைக்கும் உதவியாளருக்கு
பாராட்டுக்கிடைக்காமல்
பார்த்துக்கொள்வார்.

ஆனால் மேலிடத்தில் உள்ள
எல்லோரையும் எப்போதும்
ஏமாற்றமுடியாது.
சிலர் உண்மை நிலவரத்தை
உள்ளபடியே உணர்ந்து
வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு வாரமும்
பற்று, வரவு,
வருவாய் செலவு என
ஒவ்வொன்றையும்
வகைப்படுத்தி மாதம்
முடிவடைந்ததும் பட்டியலை
கோட்ட அலுவலகத்திற்கு
அனுப்பவேண்டும்.

ஒரு மாதம் சிறிது
காலதாமதமாகியிருக்கிறது.

எனவே கோட்ட
அலுவலகத்திலிருந்து
கிளை மேலாளருக்கு
தொலைபேசி அழைப்பு வத்தது.
அழைப்பு வரும்போது
குறிப்பிட்ட பிரிவுத்தலைவர்
கிளை மேலாளர் அருகிலேயே
இருந்திருக்கிறார்.

கிளை மேலாளர் கோட்டத்தின்
நிதித்துறை மேலாளரிடம்
பிரிவுத் தலைவர் அருகில்
இருப்பதாகக்கூறி அவரிடம்
இணைப்பைக் கொடுக்கவா என
கேட்டிருக்கிறார்.

உடனே நிதித்துறை மேலாளர்
"அவரிடம் கொடுக்க வேண்டாம்
கணக்குத்துறையில்
நாசர் என்ற உதவியாளர்
இருப்பார். அவரிடம் நான் கேட்டுக்கொண்டதாக கூறி
விரைந்து அனுப்பிவைக்கும்படு சொல்லுங்கள்" எனக் கூறிவிட்டு
தொடர்பை துண்டித்துவிட்டார்.

அந்த ஆர்ப்பாட்டமில்லாத
நாசர் திருநெல்வேலி நகரக்கிளை
இரண்டின் மேலாளர்

இன்று அவருக்கு
பிறந்தநாளுக்கு வாழ்த்து
தெரிவிக்கும்போது இந்த
நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.

எந்தவித எதிர்பார்ப்புமின்றி
நமது கடமையை ஒழுங்காக
செய்துவந்தால் அங்கீகாரம்
தேடிவரும் என்பதை
புரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment