என் நண்பர் ஒருவர்.
என்னுடன் எல்ஐசியில்
பணியில் சேர்ந்தார்.
ஒரே கிளையில்
பணியாற்றிய அனுபவம்
உண்டு.
ஆங்கிலத்தில்
நல்ல புலமை.
மிகநன்றாக
குறிப்புகள் எழுதுவார்.
கடிதங்களையும் சிறப்பாக
எழுதுவார்.
வாடிக்கையாளர் சேவை
அவர்கள் மகிழும்படி
வழங்குவார்.
பல பதவி உயர்வுகளை
அவர் பெற்றிருந்தாலும்
ஒவ்வொன்றிலும் சிறிது
தாமதம் ஏற்பட்டது.
உடன் பணிபுரிவோரிடம்
கடிந்து பேசமாட்டார்.
பணியை முடிக்கவேண்டி
சிலநேரங்களில் அவரே
அவரே அந்த பணியை
முடித்துக்கொடுப்பார்.
வாடிக்கையாளருக்கு
பாலிசி மீதான
கடன்களை அவரே
கணக்கிட்டிருக்கிறார்.
இந்த தகவல் அறிந்த நான்
தனியாகப் பணி செய்யாமல்
அணியாகப் பணியாற்ற
வேண்டும் என்று பலமுறை
ஆலோசனை
கூறியிருக்கிறேன்.
ஒரு சமயம் இவரது
கிளைக்கு ஒரு
துணைக்கிளை
அனுமதிக்கப்பட்டது.
அந்த துணைக்கிளைக்கு
ஒரு கிளை மேலாளர் கூட
நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இவரது இளகிய குணத்தை
நன்கு அறிந்திருந்த
துணைக்கிளை மேலாளர்
தனது வேலையை
குறைக்கும் பொருட்டு
புதிதாகப் பார்த்துள்ள
கட்டிடத்தின்
உரிமையாளருடன்
சண்டைபோட்டுவிட்டார்.
கட்டிடத்தின் உரிமையாளர்
இனி துணைக்கிளை
மேலாளருடன் பேசமாட்டேன்
என்ற நிலை எடுத்துவிட்டார்.
உரிமையாளருடன்
விவாதிக்கும் வேலையையும்
என் நண்பர் எடுக்க வேண்டிய
கட்டாயத்துக்கு உள்ளானார்.
நல்லதொரு பணியாளராக
வாடிக்கையாளர்
நலம் பேணும்
நல்ல மனதுக்காரராக
இருந்த போதிலும்
நல்ல நிர்வாகியாக தன்னை
மாற்றிக்கொள்ளாததினால்
உயர்நிலை உயர்வு ஒன்று
நீண்ட வருடங்களாக
தட்டிப்போய்க்
கொண்டிருத்தது.
மிகத்தாமதமாகவே
அந்த உயர்வு அவருக்கு
கிடைத்தது.
No comments:
Post a Comment