சேக்காளி சொடலையை
பாத்ததும் நான் ஒளிய பாத்தேன்.
அந்த சண்டாளப்பய என்ன
பாத்து தொலச்சிட்டான்.
ஏல எசக்கி .....
எப்பொல சிட்னியில
இருந்து வந்தே ன்னு கேட்டான்.
சரி எடக்கு மடக்கா கேக்காம
சாதாரணமா கேக்கானேன்னு
ஆச்சரியப்பட்டேன்.
நாலுநாளாச்சுவே ன்னு
சொன்னேன்.
நம்மூருக்கும் ஓம் மவன் இருக்க
சிட்னிக்கும் எத்தனை மணிநேரம்
வித்தியாசம்னு கேட்டான்.
எழவு இழுக்காம நம்ம
விடமாட்டாம்பொலுக்கே ன்னு
மனசுக்குள்ளயே ஏசிக்கிட்டு
நம் மூரு நேரத்தோட அஞ்சரை யை கூட்டிக்கணும்னு சொன்னேன்.
அப்படியாலன்னு கேட்டுட்டு
ஏல ஒவ்வோரு தடவையும்
அஞ்சரையைக்கூட்டுன்னு
சொன்னா கஷ்டமுல்லாலன்னு
கேட்டுட்டு ஏல நீ
பொஸ்தகத்தை படிச்சுட்டு
பட்டம் வாங்கின பயா..
ஒனக்கு அனுபவப்பாடத்துல
கோழி முட்டைதாம்ல ன்னு
சொல்லிட்டு
ஏல ஒன்னோட வாச்சுல
இப்ப நேரத்த பாரு..
தெரியுத நேரம் தான்
நம்மூரு நேரம்.
வாச்சை அப்படியே சுத்தி
தலைகீழ வச்சுபாரு ...
அப்ப தெரியுதுல்லால
அதுதாம்ல சிட்னி நேரம் ன்னு
ஒரு போடு போட்டான்
அந்த சொடல.
இதப்போல ஒன் மவன்
சிட்னி நேரத்தைபாத்துட்டு
வாச்சை தலகீழா வச்சுபாத்தா
அவனுக்கு நம்மூரு
நேரம் சரியாத்தெரியும்ன்னு
சொல்லிட்டு என்ன கேவலமா
ஒரு பார்வை பாத்தான்.
அவஞ்சொன்னபடி பாத்தா
சரியாத்தாங்க வருது.
இதெல்லாம் எப்பவே
படிச்சேருன்னுகேட்டதுக்கு
போல போக்கத்த பயல..
நீ என்னவோ புளுக் புளுக்குன்னு
வெளிநாட்டுக்கு போற
பயலுவளுக்கு தான்
இதெல்லாம் தெரியும்னு
நெனைக்கேரு.
உள்ளூர்ல இருக்க
எங்களுக்கும் வெவரம் தெரியும்னு
தெரிஞ்சுக்கலன்னான்.
சொடல எப்பவுமே
சரியாத்தான் சொல்லுதான்.
நீங்க ஏஞ்சேக்காளி
சொடல ய பத்தி
என்ன நெனக்கீய..
No comments:
Post a Comment