ஏல எசக்கி..
சொடல வாறான்.
ஓடிப்போயிருன்னு
பக்கத்துல நின்ன
சுப்பையா கத்துனான்.
நான் ஒளிய பாத்தேன்.
அதுக்குள்ள சேக்காளி
சொடலை என்ன
பாத்துட்டான்.
சரி..விதிச்சவிதின்னு
நெனச்சுட்டு அவன்ட்ட
போனன்.
ஏல எசக்கி நேத்து
நம்ம பேராச்சி ரிட்டயர்மெண்டு
கூட்டத்துக்கு போனியாம.
என்னல பேசுனன்னு
கேட்டான்.
நாஞ் சொன்னேன்.
பேராச்சி நல்லவன்.
நல்ல ஞாபக சக்தி உண்டு.
எல்லாப்பயலுவ பேரையும்
மறக்காம ஞாபகம் வச்சிருப்பான்.
ஆஃபீசு சட்ட திட்டங்கள்லாம்
அத்துபடி.
எந்த சட்டம், எந்த மாத்தம்
எப்போ வந்துச்சு யாரு
கையெழுத்து
போட்டிருந்தாவொ ங்கதெல்லாம்
சரியா சொல்லுவாம்.
யாரு யாரு எங்கெங்க
எப்போ இருந்தாவொங்கது
அவனுக்கு தெரியும்.
இப்படில்லாம் பேசினே ன்னு
சொன்னதுதான் ...
சொடலைக்கு
கோவம் வந்துட்டு.
ஏல நீ தான் மெச்சணும்
அந்த பேராச்சிய.
நான் இப்பத்தான்
அவனோட பெஞ்சாதிய
பாத்துட்டு வறேன்.
அவளோட பொலம்பல் இருக்கே
நியாயமா இருக்குல.
வீட்டுல மூக்கு கண்ணாடய
கழத்தி எங்கியாவது வச்சுட்டு
வச்ச இடத்த மறந்துட்டு
அத தேடச்சொல்லி பெஞ்சாதியை
படுத்தி எடுத்துருவானாம்.
இதமாதிரி சீப்பு, வண்டிச்சாவி
மணிபாஸ் எல்லாத்தியும்
எங்கயாவது வச்சிட்டு
வச்ச எடத்தை மறந்திருவானாம்.
இவனைப்போயி
ஞாபகசக்தி உள்ளவன்னு
ஒளரியிருக்கிய ன்னு
சத்தம் போட்டான்.
வேற என்னல்லாம்
அளந்துவிட்டன்னு கேட்டன்.
மனுசங்கள கையாள்றதில
வல்லாளகண்டன் னும்
பேசுனமுன்னு சொன்னன்..
அதுக்கு சொடலை
சொன்னாம்பாருங்க
ஒரு பதிலு..
அசந்துபோயிட்டன்.
பேராச்சிக்கு பேரன் பொறந்து
ஆறுமாசம் ஆச்சாம்.
பேரன் அழுதானன்னு
இவன்ட்ட பாத்துக்கச்சொல்லி
பெஞ்சாதி கொடுப்பாளாம்.
அழுகைய நிப்பாட்ட
வெளாட்டு காட்டாம
ஆபீஸ்ல அதட்டுதமாரியே
புள்ளய அதட்டுவானாம்.
புள்ள அழுகய நிப்பாட்டாம
கூடக்கொஞ்சம்
அழுது தொலய்க்காம்.
கொழந்தய பாத்துக்கக்கூட
துப்புல்லாத கூமுட்டைன்னு
அவன் பெஞ்சாதி
இப்பொ தான்
ஏங்கிட்ட சொல்லி
கேவிக்கேவி அழுதா..
இவனப்போயி நீ ஞாபகசக்தில
பெரிய ஆளு...வல்லாளகண்டன்னு
பொய்நெல்லாம் பேசிட்டு
வந்துருக்க..ஒனக்கும் அறிவில்ல
பேராச்சிக்கும் அறிவில்லன்னு
பெருசா சத்தம் போட்டான்
ஆபீசு அறிவு வேற
வீடு குடும்ப கொழந்த
நிர்வாகம் வேறன்னு
சொன்ன சொடல
உண்மையாவே
வெவரமானவந்தான்.
நீங்க என்ன
சொல்லுதியொ.
No comments:
Post a Comment