Sunday, 26 February 2017

புத்தாண்டே வருக

புத்தாண்டை வரவேற்க
சிட்னி கடற்கரைப் பாலத்தில்
31/12/2016 இரவு 12 மணிக்கு
நடைபெற்ற வண்ணமிகு
வாணவேடிக்கை.

நகரமே மக்கள்
வெள்ளத்தின்
நடமாட்டத்தால்
களை கட்டியது.

காட்சியை கண்டுகளிக்க
மதியம் இரண்டுமுதலே
மக்கள் பாலத்தைத்சுற்றி
இடம் பிடிக்க துவங்கினர்.

பல இடங்களில் சில
பல மாடி வீடுகளை
வாடகைக்குப்பிடித்து
அமர்ந்து விட்டனர்.

மிக மிக உயரமான
பாலம் என்பதால்
தொலைவிலிருந்து
பாரத்தாலும் பாலத்தின்
அழகை காணமுடியும்.

பாலம் முழுவதும்
வெடிகள் நிரப்பப்பட்டு
ஆயத்த நிலையில்
இருந்தது.

தொடர் வண்டிகள்
இலவசமாகவே
நடத்தப்பட்டன.

மக்கள்
பாய் விரிப்புக்கள்
நொறுக்குத்தீனி
வகைகள் என்று நல்ல
ஆயத்தம் செய்து
குடும்பத்தோடு
குதூகலமாய்
வந்திருந்தனர்.

முகச்சரியாக
நள்ளிரவு12 மணிக்கு
துவங்கிய வண்ணமிகு
ஒலியோடு வந்த
ஒளிச்சிதறல்களின்
காட்சி கண்ணுக்கு
நல் விருந்தாக இருந்தது.
கால்மணி நேரம்
நன்றாக ரசித்தோம்.

பார்த்து பார்த்து
ரசிக்கவேண்டிய நிகழ்ச்சி..

No comments:

Post a Comment