நான் கொல்லம் கிளையில்
உதவி நிர்வாக அலுவலராக
பணியாற்றிய நாட்கள்
பசுமையாக என் நினைவில்
இப்போதும் நிழலாடுகின்றன.
எனது கிளை மேலாளர்
மதிப்பிற்குரிய
திரு கே. வி. மாத்யூ.
ஒரு சமயம் தன்னுடைய
தனியறையைவிட்டு
எனது இருக்கைக்கு வந்து
என்னெதிரில் நீண்ட நேரம்
அமர்ந்திருந்தார்.
தனியறையை விட்டுவிட்டு
நான் இருக்கும் பொது
அறைக்கு வந்து ஏன்
இருக்கவேண்டும் என்று
கேட்டேன்.
அவர் சொன்னவை இதோ..
"இசக்கிராஜன்..
என் அறைக்கு ஒரு
மண்டலமேலாளர் மன்ற
உறுப்பினராகவுள்ள
முகவர் ஒருவர் பல
குற்றச்சாட்டுக்களுடன்
வந்துள்ளார்.
அவர் வயதில் மூத்தவர்.
எப்போதுமே புகார்
பட்டியலோடுதான் வருவார்.
அவரை சமாளிக்க
என்னால் முடியாது.
அவரை வெளியேறும் படியும்
என்னால் கூற முடியாது.
கூறவும் கூடாது.
அதே நேரம் நான் எனது
அறையில் இருந்து வெளியே
வருவதை எவராலும்
தடுக்க முடியாது..
அதனால் எனது
அறையிலிருந்து
நான் வெளியே
வந்துவிட்டேன்.
என்னைக்காணாமல்
அவரும் சிறிது நேரத்தில்
வெளியே போய்விடுவார் .
பிறகு நான் எனது
தனியறைக்கு
சென்றுவிடுவேன்.
அதுவரை உங்களோடு
இருக்கிறேன்".
இந்த சிக்கலை இப்படித்தான்
சிக்கலில்லாமல் முடிக்கவேண்டும்."
இந்த டெக்னிக் எப்படி?.
No comments:
Post a Comment