Sunday, 26 February 2017

சுருங்கிவிட்ட உலகம்

சிட்னி மாநகரத்தில்
Granville என்ற
பகுதியில் வசிக்கும்
திரு ரங்கராஜன்..
திருமதி பாரதி தம்பதியர்.

இருவருமே இங்கு
பணிபுரியும் பொறியியல்
பட்டதாரி வல்லுநர்கள்.

திரு ரங்கராஜன்
ஓர் ஐயப்ப பக்தர்.

வருடாவருடம்
சபரிமலைக்குச்
செல்வது உண்டு.

இங்கு உள்ள ஐயப்பன்
கோவில் நிர்வாகிகளுள்
ஒருவர்.

ஐயப்பன் கோவிலுக்கு
சென்றபோது அறிமுகம்.

அவரது சகோதரி வீடு
திருவரங்கத்தில் உள்ளது.
இதனால் நெருக்கம்
இறுகியது.

நான் எல்ஐசி என்று
அறிமுகப்படுத்தியபோது
திருச்சி முதற்கிளையின்
மறைந்துவிட்ட முகவர்
ராமசாமியின்
வாடிக்கையாளர்
என்று அவர் சொன்னபோது
மகிழ்ச்சியடைந்தேன்.

இப்போது
அவரது மனைவி
முகவர் ஆகியுள்ளார் என
நான் சொன்னபோது அந்த
தகவலும் தெரியும் என்றார்.

அவரும் தைரியம் கூறி
முகவராக வேண்டும் என
எடுத்துரைத்ததாகவும்
ஆதரவு தர 
உறுதியளித்ததாகவும்
கூறி மகிழ்ந்தார்.

இங்கிருந்தே அவரிடம்
தொடர்புகொண்டு நான்
வந்திருக்கும் தகவலையும்
கூறினார்.

அதற்குப்பிறகு மிகவும்
நெருக்கமாகிவிட்டோம்.

இங்கு ரத்த தானத்தின்
அவசியத்தை வலியுறுத்தி
நிறைய நண்பர்களை
ரத்தம் கொடுக்க
உற்சாகப்படுத்தி வருகிறார்.
அவரும் அவ்வப்போது
ரத்தம் வழங்கி வருகிறார்.

இன்று அவரது இல்லத்தில்
ஐயப்பன் வழிபாட்டு
பூஜை நடைபெற்றது.

அவரின் அன்பு அழைப்பின்
காரணமாக நாங்களும்
கலந்து கொண்டோம்.

அங்கு வந்த அவரது
உறவினர்களை கண்டு
உறவாட முடிந்தது.

ஒருவர்
திரு ஷண்முகப்பிரியன்.
இங்கு பணிபுரியும்
சென்னையைச்சேர்ந்த
இவர் என் பள்ளிக்கூட
வகுப்புத்தோழனும்
நெல்லை இந்துக்கல்லூரியின்
ஓய்வு பெற்ற முதல்வருமான
திரு நமச்சிவாயத்திற்கு
தூரத்து உறவு.

இன்னொருவர் திரு சுமன்.
மாயவரத்துக்காரர்.
அங்குள்ள
எங்கள் எல்ஐசி முகவர்
திரு கிருஷ்ணமூர்த்தியின்
நெருங்கிய உறவினர்.

இன்னும் ஒரு மதுரைக்காரர்
திரு குமரன் .திருச்சியில்
BSNL லில் இரண்டுவருடம்
பணியாற்றியவர்.

உலகம் மிகவும்
சுருங்கி விட்டது என்று
உணர்ந்ததால்
இத்தகவலை
மகிழ்ச்சியுடன்
பகிர்கிறேன்.

No comments:

Post a Comment