நிறைய நண்பரகள் வாட்சாப்பில்
வழங்கப்படும் அனைத்து
பயன்பாடுகளையும் அறிந்து
சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
செட்டிங்சில் கொடுக்கப்பட்டிருக்கும்
Status and Phone என்ற இடத்தில்
அவர்களே வழங்கியுள்ள வார்த்தைகளில்
பிடித்ததை தெரிவு செய்து அவற்றை
இடம் பெறச்செய்யலாம்.
நமக்குப்பிடித்த வார்த்தைகளை
வடிவமைத்து அவற்றையும்
பதிவு செய்யலாம்.
நம் நண்பர்கள் பலர் அருமையான
வார்த்தைகளை வடிவமைத்துள்ளது
கண்டு பொறாமைப்பட்டிருக்கிறேன்.
பெருமைப்பட்டிருக்கிறேன்.
சிலர் ஆங்கில வாரத்தைகளை
வைத்திருக்கிறார்கள்.
பல தமிழ்ப்பற்றாளர்கள் தமிழ்
வார்த்தைகளை வாசகமாக்கி
தங்களது அடையாளத்தை
வாசமாக்கியிருக்கிறார்கள்.
என் தொடர்புப்பட்டியலில்
உள்ள நண்பர்கள்
பயன்படுத்தும்
வாசமுள்ள தமிழ்
வார்த்தைகளை
இங்கு பகிர்கிறேன்.
திருச்சி முகவர் முத்துராமன்...
நல்லதே நினப்போம்..நல்லதே நடக்கும்.
திருநெல்வேலி நண்பன் சுடலையாண்டி..
உழைப்பே உயர்வு தரும்.
திருச்சி எல்ஐசி உதயசூரியன்...
முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்.
திருப்பூர் முகவர் வெள்ளைசாமி..
வாழ்க வளமுடன்.
எல்ஐசி முன்னாள் அலுவலர் ஸ்ரீவத்சன்..
உள்ளொளிர் பெருஞ்சுடர்.
சென்னைவாழ் எல்ஐசி நெல்லை சேகர்..
வாழ்க்கை வாழ்வதற்கே.
பேராசிரியர் சங்கர்ராம பாரதி...
வெற்றியின் முகவரி.
ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பத்...
இல்லை எனக்கெதிர்.
சென்னைவாழ்
மன்னை ஏ.ஆர்.கே...
சொந்தம் எப்போதும்
தொடர்கதை தான்.
தஞ்சை "புரோ" ரவி..
துணிவே துணை.
தாய்கோ ரவி கணேஷ்..
இதுவும் கடந்து போகும்.
பாளை சாலமோன் ராஜா..
விரல் பிடித்து தொடர்கிறது உன் நினைவுகள்.
சென்னைவாழ் உறவினர்
நெல்லை ராதாகிருஷ்ணன்..
அடுத்தவர் நலத்தை நினைப்பவர்களுக்கு
ஆண்டு முழுவதும் சுபதினம்.
சகோதரி சென்னைவாழ்
திருமதி பத்மா சுந்தரேசன்..
இன்பம் துன்பம் எது வந்தாலும் மன
அமைதியை இழந்து விடாதே.
நெல்லை கல்லூரித்தோழர் பரிமேலழகன்..
நண்பரகளே வணக்கம்.
நண்பர் "வைசாக்" எல்ஐசி முரளி..
முதல்வனாயிரு.அல்லது முதல்வனோடு இரு.
சகோதரி மீனாட்சி முரளி..
நட்பால் இணைவோம்.
நெல்லை உறவினர்
எல்ஐசி ஆறுமுகராஜசெல்வி..
தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.
கரூர் எல்ஐசி மேலாளர் குமரன்...
முயன்றால் சத்தியமாவது சத்தியமே.
"பச்சைத்துண்டு" காயல் மஹபூப்...
பிறவிப் போராளி.
என் பால்ய நண்பன் காந்திமதிநாதன்..
மண் மரம் காற்று மழை என்
காதல் தேவதைகள்.
என் உயிர் நண்பன் ரைஸ்மில் ஜெய்சிங்...
தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்..
சென்னை எல்ஐசி ஜெயா ஜாண்..
பாடிப்பரவசமாய் நிற்கவே தவம்
பண்ணியதில்லையடி.
நெல்லை G.S.விசுவநாதன்...
நண்பர்களை தெரிவு செய்வதில்
கவனமாய் இருத்தல் வேண்டும்.
எல்ஐசி திருக்கோவிலூர்
முதுநிலை மேலாளர் தம்பி கோகலே..
யாதும் ஊரே யாவரும் கேளிர்..
திருச்சி எல்ஐசி FSE பாலா...
கெடுவான் கேடு நினைப்பான்.
துறையூர் கவிஞர் கோதண்டராமன்...
விழு- எழுவது அறிவாய்.
தூத்துக்குடி எல்ஐசி தம்பி சுகுமார்...
செய்யமுடிந்தவன் சாதிக்கிறான்;
செய்யமுடியாதவன் போதிக்கிறான்.
ஸ்ரீவைகுண்டம் வளர்ச்சி அலுவலர் செந்தில்..
கடின உழைப்பு மட்டுமே
கனவினை நனவாக்கிடும்.
சங்கரன்கோவில் சந்திரசேகர்..
நலமே நிறைக வளமே விளைக..
திருவரங்கம் தினமலர் முருகேசன்...
தூதும் நன்றும் பிறர் தர வாரா..
தஞ்சை தரும சரவணன்...
அன்பை வெல்லது அன்பு மட்டுமே.
நெல்லை எல்ஐசி ஹேமலதாரமேஷ்...
சந்திக்காத கண்களில் இன்பம்
செய்யப்போகிறேன்.
நெல்லை இந்துக்கல்லூரி
ஓய்வுபெற்றமுதல்வர் நமச்சிவாயம்..
செய்வன திருந்தச்செய்.
கோவில்பட்டி எல்ஐசி செல்லம்..
தூக்கத்தில் காண்பதல்ல கனவு
தூங்கவிடாமல் செய்வதே கனவு.
சென்னை வாழ் உறவினர்
தூத்துக்குடி உமா..
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்.
கோபி கிளை மேலாளர் ரவியுத்தீன்..
இறையருள் நிறைக.
பெருந்துறை கிளை மேலாளர் நரசிம்மன்...
எறும்புகள் பேசுவதில்லை.
சென்னை முதுநிலை கிளை மேலாளர் ஈஸ்வரன்..
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலரட்டும்.
சங்கரன்கோவில் அய்யலு..
மகிழ்ச்சி.
ஆக்சிஸ் வங்கி மேலாளர் பாலகுருமூர்த்தி..
போராடி தோற்றுப்பார்..
வெற்றியின் பாதை தெரியும்.
திருப்பூர் முகவர் கார்த்திகேயன்.
நான் ஆளப்பிறந்தவன்.
இசக்கிராஜனாகிய நான்...
எப்போதும் சுறுசுறுப்பு
எவ்வளவு பொருள்பொருந்திய
வார்த்தைகள்..
No comments:
Post a Comment