திரு அரங்கசாமி அண்ணாச்சி...
இந்த மீசைக்கார அண்ணாச்சி
ஒரு பாசக்கார அண்ணாச்சி.
நேசம் காட்டும் அண்ணாச்சி.
ஓய்வும் முதுமையும்
எனக்கில்லை என
அடித்துக்கூறும் இந்த
அண்ணாச்சி
திருச்சி நகர
மலைக்கோட்டை கிளையின்
ஓய்வு பெற்ற வளர்ச்சி
அலுவலர்.
உடலாலும்
உள்ளத்தாலும்
சிறிது சோர்ந்திருந்த
வேளை..
அரியலூர் கிளை
திரு மணவாளன்
சோர்வைத்துரத்த
அண்ணாச்சிக்கு
நல் ஆலோசனை
ஒன்றினை அளித்தார்.
எப்போதும்
சுறுசுறுப்பாக இருந்திட
முகவர் பணியாற்றி
மற்றமுகவர்களுக்கு
ஓர் ஒளிகாட்டியாக
இருக்கலாம் என்று
எடுத்துச்சொல்லி
அண்ணாச்சியை ஒரு
முகவராக்கினார்.
முகவரானதும்
இவரது அடையாள எண்
4567 ஆகும்.
ஏற்றத்தை எடுத்துரைக்கும்
அலங்கார எண்.
முகவர் பணி துவங்கி
முதலாண்டிலேயே
மிக உயரிய பெருமையான
MDRT க்கு தகுதி
பெற்றுள்ளார்.
நெஞ்சம் நிறைகிறது.
மனது மகிழ்ச்சியால்
துள்ளுகிறது.
இந்த பெருசைப்பார்த்து
இளசுகள் உற்சாகம்
கொள்ளவேண்டும்.
உழைக்கவேண்டும்.
ஏற்றம் கொள்ளவேண்டும்.
அண்ணாச்சியை இந்த
சாதனைக்காக வணங்கி
வாழ்த்தி மகிழ்கிறேன்.
No comments:
Post a Comment