திரு சங்கர மூர்த்தி
அண்ணாச்சி..
கரம்பக்குடியைச் சேர்ந்த
இவர் இப்போது
தஞ்சாவூர் வாசி.
எல்ஐசி யிலிருந்து
கோட்ட மேலாளர்
நிலையில் ஓய்வு பெற்ற
ஓர் ஓய்வூதியர்.
தன்னை வளர்த்த
எல்ஐசி நிறுவனத்தை
வளர்த்த தாயாகவே
நினைத்து நித்தமும்
போற்றும் விசுவாசி.
இவர் வீட்டிற்கு
நாம் சென்றால்
நம் கண்களை
கவர்ந்திழுப்பது
பெரிய அளவில்
பதிக்கப்பட்டிருக்கும்
"ஒளிரும் விளக்கை
அணைந்து விடாமல்
காக்கும்கரங்கள்" என்ற
எல்ஐசி யின்
முத்திரைச்சின்னம்தான்.
இவரது மோதிரமும்
இந்த சின்னத்தை
தாங்கி நிற்கும்.
எல்ஐசி ..
தஞ்சைக்கோட்டத்தில்
தஞ்சைக்கிளையில்
வளரச்சி அலுவலராக
பல முத்திரைகளை
முதலில் பதித்தவர்.
தஞ்சைக்
கோட்டத்திலேயே
இவரது அணிமுகவர்கள்
தான் மிக அதிக
எண்ணிக்கையில்
வளர்ச்சி அலுவலராக
உயர்ந்தார்கள் என்ற
தனிப்பெருமை
இவருக்குண்டு.
தஞ்சைக்கோட்டத்தின்
முதல் கோடியாதிபதி
என்ற முதல் மரியாதை
இவர் பெற்ற பெருமை.
2000ம் ஆண்டு
என்று நினைவு.
அந்த ஆண்டில்
மண்டலத்திலேயே
ஒரே ஒரு
கிளை மேலாளர்தான்
முதுநிலைக்கிளை
மேலாளராக
பதவி உயர்த்தப்பட்டார்.
அந்த ஒரே ஒருவர்
இந்த அண்ணாச்சிதான்.
பணி நிறைவு தம்மை
ஓய்வெடுக்க
வைத்து விடும்
என்ற நினைப்பில்
முடங்கிவிடக்கூடாது என்று
முகவராகி பழைய
சுறுசுறுப்பில்
இப்போதும்
சுழன்று சுழன்று
சுற்றிவருகிறார்.
வணங்கி
மகிழ்கிறேன்
வளமுடனும்
சுறுசுறுப்புடனும்
பல்லாண்டு வாழ
இறைவனை
வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment