Tuesday, 2 January 2018

நோட்டு எம்.எல்.ஏ.

மதுரையில்
எல்ஐசி நிறுவனத்தின்
கோட்ட அலுவலகம்
செல்லூர் பகுதியில் உள்ளது.

ஊழியர்கள் அலுவலர்கள்
பலர் சேர்ந்து மீனாம்பாள்புரம்
என்ற பகுதியில்
எல்ஐசி காலனி என்ற பெயரில்
ஒரு குடியிருப்பு காலனியை
அமைத்திருக்கிறார்கள்.

சில வருடங்கள் கழித்து
வேறு பல ஊழியர்கள்
ஒன்று சேர்ந்து சாந்திநகர்
என்ற பகுதியில்
எல்ஐசி காலனி என்ற பெயரில்
ஒரு  குடியிருப்பு காலனியை
அமைத்திருக்கிறார்கள்.

நான் 1980 ல்
சென்னைக்கோட்டத்திலிருந்து
மதுரைக்கோட்டத்திற்கு
மாறுதல் பெற்று வந்தேன்.

அந்த காலகட்டத்தில்
காரைக்குடி கிளையில்
என்னுடன் பணியாற்றியவர்
மதுரைக்காரரான
திரு MK சிவராமன்.

அவர் என்னிடம் பேசும்போது
அந்த காலனி களைப்
பற்றிக்குறிப்பிடும்போது
மீனாம்பாள்புரம் பகுதி
LIC காலனியை
"AO" காலனி என்றார்.

சாந்தி நகர் பகுதி
LIC காலனியை
"மாவோ" காலனி என்று
கூறினார்.

எனக்கு முதலில்
ஏன் அப்படி பெயர்
என்று புரியவில்லை.

அவரிடம் விளக்கமாகக்
கூறும்படி  கேட்டேன்.

AO நிலை வரையில்
உள்ள அலுவலர்களும்,
ஊழியர்களில் AO போன்ற
அதிகார வர்க்க மனப்பான்மை உள்ளவர்களும்
மீனாம்பாள்புரத்தில் வீடு கட்டி இருந்ததால் அது
"AO" காலனி என்று
அழைக்கப்படுவதாக
ஆர்வமுடன் கூறினார்.

ஒற்றுமையுடனும்
தோழமையுடனும்
செயல்படும் ஊழியர்கள் சேர்ந்து
வீடு கட்டியுள்ள  காலனி
"மாவோ" காலனி என்று
அழைக்கப் படுவதாக
மகிழ்ச்சியுடன் கூறினார்.

அதை அடுத்து ஒரு
விளக்கமும் கூறினார்.

AO காலனியில்
உள்ளவர்களிடம்
ஒருவொருக்கொருவர்
உதவியோ தோழமையோ
அவ்வளவாக இருக்காது
என்றார்.

ஆனால்
மாவோ காலனியில் குழந்தைகளிடையே கூட
ஒற்றுமையும் தோழமையும்
மிகுந்து காணப்படும்
என்றார்.

காலனிகளுக்கு
சரியாகத்தான்
பட்டப் பெயர்கள்
வைத்துள்ளனர்.

இதை எதுக்குய்யா
இப்போ சொல்றேருன்னு
கேட்பது காதுகளில்
நன்றாகவே விழுகிறது..

சொல்கிறேன்..
சொல்லிவிடுகிறேன்..

என்னுடயை கேரள நண்பர்
திரு கி.சந்திரசேகரன்.
என்னிடம் பேசும்போது
அங்கே அவரது தொகுதியின்
எம்.எல்.ஏ ஓர்
"ஓட்டு" எம்.எல்.ஏ
என்று பெருமையுடன்
கூறினார்.

நம்மூரு
எம்.எல்.ஏ க்களெல்லாம் வெறும்
"நோட்டு" எம்.எல்.  க்கள்
என்று எகத்தாளமாக்
கூறினார்.

உண்மை தானே?

இதைக் கேட்டதும் தான்
மதுரை எல்ஐசி
காலனிகளை பற்றிய
பெயர்க்காரணம் எனது
நினைவிற்கு வந்தது.

No comments:

Post a Comment