Sunday, 7 January 2018

உணர்வுபூர்வ உறவு

இன்று காலை
வாட்சாப்பில்
என் நண்பர்
திரு முரளிதர் அவர்கள்
பதிவு செய்திருந்த
அருமையான வரிகள்...

"Friends are those rare people
who ask how you are and then
wait for the answer."

இந்த வைர வரிகளை
படித்ததும் எனக்கு
பழைய நினவுகள்
வந்து போயின.

நான் முன்பு இருந்த
ஒரு வெளி மாநில
கோட்டத்தில்
Marketing பொறுப்பில்
எங்களுக்கு
முன்பு இருந்தவர்கள்
மிகவும் கெடுபிடியுடன்
இருந்திருக்கிறார்கள்.

அடுத்ததட்டில்
இருந்தவர்கள்
எப்போதும் ஒரு
அழுத்தத்திலும்
விரக்தியிலும்
உற்சாகமின்றியும்
இருந்தார்கள்.

அது வணிகத்திலும்
வெளிப்பட்டது.

வணிகத்தில் ஏற்றம்
காணவில்லை.

எல்லோருக்கும்
ஏமாற்றமே நிறைய
கிடைத்தது.

வணிகச் சறுக்கல்
பற்றிய செய்தி
எங்களுக்கு மேலே
இருந்தவர்களின்
காதுகளுக்குச்சென்றது.

எங்களையும்
எங்களுக்கு
அடுத்த நிலையில்
இருந்தவர்களையும்
உற்சாகப்படுத்தி
மண்டல மேலாளர்
பேசினார்.

Marketing என்றால் என்ன,?
பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களை
எப்படி எப்படி
உற்சாகப்படுத்தி 
உசுப்பி விட வேண்டும்,
எப்படி எல்லோரிடமும்
நல்லுறவு வைத்துக்கொள்ளவேண்டும்
என்றெல்லாம் 
சிறிய சிறிய
ஆலோசனைகளை
அள்ளி வழங்கினார்.

அவர் கூறிய
எளிமையான
உண்மையான
வார்த்தைகள்
இதோ இரண்டே வரிகளில்

Marketing is NOTHING But
Emotional Relationship.

இந்த பொருள்பொதிந்த
வார்த்தைகள்
இன்னமும்
என் காதுகளில்
ரீங்காரமிட்டுக்
கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரி
உணர்வுபூர்வ உறவை
பெற்றிருந்த நல்லிதயம்
கொண்டிருந்தவர்கள்
என் நினைவிற்கு வந்து
போனார்கள்..

Marketing பொறுப்பில் நிர்வாகப்பிரிவிலிருந்து
மாற்றம் பெற்று வந்த
பலர் இருந்திருக்கிறோம்..

எங்களைப்போன்றோர்
கிளை மேலாளர்களுடனும்
வளர்ச்சி அலுவலர்களுடனும்
முகவர்களுடனும்,
தொலைபேசியில்
கலந்துரையாடுவோம்.

கருத்தரங்குகளில்
விவாதிப்போம்.

அப்போதெல்லாம்
எடுத்த எடுப்பிலேயே 
வணிகம் எப்படி உள்ளது?

வணிகப்பெருக்கத்திற்கான தடாலடித்திட்டங்கள் என்ன?

எந்த மாதிரியான 
உதவி தேவை?

என்பவை பற்றித்தான்
உரையாடலும்
விவாதங்களும் இருக்கும்.

அதே நேரம்
முன்பு  முகவர்களாக
வெற்றிகரமாக
பணியாற்றிவர்கள்,
வளர்ச்சி அலுவலர்களாக 
வாகை சூடியவர்கள் என்று
பலர் Marketing பொறுப்பில் 
உயர் பதவிகளில்
இருந்துள்ளனர்.

அவர்களது அணுகு முறை
வேறு ரீதியில் இருப்பதை
நேரில் கண்டு
உணர்ந்திருக்கிறேன்.

எனக்கு நெருக்கமான
ஒரு கிளை மேலாளர்.

அவர் பெயர்
திரு ஸ்டீபன்..

நாஞ்சில் நாட்டுக்காரர்.

தற்போது ஓய்வூதியர்..

அவர் Marketing கில்
பல நிலைகளில்
பல துறைகளில்
பல இடங்களில்
பொறுப்பில்
இருந்திருக்கிறார்.

வெற்றிகரமாக செயல்பட்டு
அகில இந்திய அளவில் கூட
சாதனை படைத்திருக்கிறார்.

அவர்
அடுக்குமொழியில் பேசும்
பெரிய பேச்சாளர் இல்லை.

ஓங்கிய குரலில் பேசி
கேட்பவர்களை 
வசியப்படுத்தும்
நாஞ்சில் புயல் இல்லை.

ஆனாலும்
எளியநடையில் பேசி
முகவர்களின் நெஞ்சை
கொள்ளை  கொள்ளும்
நாஞ்சில் நாட்டு
நல் நிபுணர்.

அவர் என்னை
கைபேசியில் அழத்தாலும் சரி
நான் அவரை அழைத்தாலும்சரி
முதலில் அவர் தான் 
பேச்சைத் துவக்குவார்.

"சார் .. எப்படி யிருக்கிய..

நல்லாயிருக்கேளா..

போன தடவை பேசும் போது
கால் வலின்னு சொன்னேள..

டாக்டரை பார்த்தேளா..

என்ன சொன்னாரு..

இப்ப பரவாயில்லையா..

ஒடம்ப நல்லா
பார்த்துக்கோங்க..

வீட்டுல எப்படியிருக்காவொ

மவனும் மகளும் எப்படியிருக்காவொ..

மருமகன், மருமகள்,
பேரன்மார் எல்லாம்
எப்படியிருக்காவொ?

ஊருக்கு எப்போ
வாராவொ?

நீங்க அவொள பாக்க
போகலயா.." ன்னு
விசாரித்த பிறகு தான்
அலுவலகம் பற்றியும்
வணிகம் பற்றியும் 
பேசுவார்.

இந்த மாதிரியான
நல்லுறவு பேணும்
ஓர் ஆயுதம் தான்
அவரது பெரும் வெற்றிக்கு
அடிப்படை காரணம்.

களப்பணியிலிருந்து 
பதவி உயர்வில்
உயர்பதவிக்கு வந்துள்ள அனைவரின்
அணுகுமுறையும்
திரு ஸ்டீபன் அவர்களின்
அணுகுமுறை போல்தான்
இருக்கும்.

அவர்களுடைய
விசாரிப்புகளும்
இந்த முறையில் தான்
இருக்கும்.

எடுத்துக்காட்டிற்காக மட்டுமே
என்னுடனான
பேச்சைப்பற்றிக்
குறிப்பிட்டுள்ளேன்.

முகவர்களிடம்
பேசும்போதும்
வளர்ச்சி அலுவலர்களுடன்
பேசும் போதும்,
வாடிக்கையாளர்களுடன்
விவாதிக்கும் போதும்,
சக மற்றும் உயர்
அலுவலர்களிடம்
கலந்துரையாடும் போதும்
அந்த களப்பணி வழி வந்த நண்பர்களின் அணுகுமுறை
இதைப்போன்ற
உணர்வுபூர்வமான 
உறவையே வெளிப்படுத்தும்.

இந்த உணர்வுபூர்வ
நல்லுறவே
மிகப்பெரிய வணிக ஈடுபாட்டை களப்பணியாளர்களிடம் ஏற்படுத்தும்.

இதுவே
மிகச்சிறந்த விளைச்சலை
வணிகத்தில் குவிக்கும்.

எனவே எனது
மண்டல மேலாளர்
அவர்கள் கூறிய
"Marketing is Nothing but
Emotional Relationship."
என்பவை மிகச்சரியானவை
என்பதை அனுபவபூர்மாக
உணர்ந்திருக்கிறேன்.

Marketing பொறுப்பில்
உள்ள அனைவருமே
"Business like"
உறவை உதறித்தள்ளி
"Emotional Relationship" ஐ
வளர்த்துக்கொள்வோம்.

உணர்வு பூர்வ உறவே வணிகத்துறையில்
வெற்றிக்கு அடிப்படை.

No comments:

Post a Comment