2017...
அநியாயங்கள்
ஆட்சி செய்த ஆண்டு.
ஆர்ப்பாட்டங்கள்
நிறைந்த ஆண்டு.
இயற்கை சீற்றத்தில்
தத்தளித்த ஆண்டு.
ஈடு செய்யமுடியாத
இழப்பை தந்த ஆண்டு.
உற்பத்தி
குறைந்திருந்த ஆண்டு.
ஊழல்
பெருகியிருந்த ஆண்டு.
எல்லோரும் பொறுமையாய்
இருந்த ஆண்டு.
ஏமாந்து
சீரழிந்த ஆண்டு.
ஐயமேதுமின்றி
அயோக்கியர்கள்
வலம் வந்த ஆண்டு.
ஒற்றுமை
குலைந்திருந்த ஆண்டு.
ஓயாமல்
ஒருவரையொருவர்
தூற்றிப்பேசிய ஆண்டு..
நல்ல படியாய் போ.போ.
போய்ச்சேர்.
2018 ஏ வா...
வாசத்துடன் வா.
அழகைச்சுமந்து வா..
அன்பைச்சுமந்து வா..
இனிமையை அழைத்துவா.
உண்மையுடன்
கை கோர்த்து வா.
நேர்மையை
நிறைய கொண்டுவா.
முன்னேற்றத்தை
கட்டி இழுத்துவா.
வளர்ச்சிப்பாதையில்
உந்திவிட வா.
தளர்ச்சியை
தள்ளிவிட்டுவிட்டு வா..
வா ..வா..
ஊழலை
உதறித்தள்ளுவோம்.
ஊழல் பெருச்சாளிகளை
உள்ளே தள்ளுவோம்.
சமூக அவலங்களை
சுட்டெரித்திடுவோம்.
உன் விடியலுக்குக்
காத்திருக்கிறோம் வா.
வா 2018 ஏ வா..
வா..வா..வா.
வசந்தத்தை அள்ளித்
தா..தா..தா.
No comments:
Post a Comment