நான் கொஞ்ச நாட்களுக்கு முன்
எனது ஆதார் எண்ணை
BSNL கை பேசி எண்களுடன்
இணைப்பதில் ஏற்பட்ட
சிக்கல்கள் பற்றி விரிவாக
சொல்லியிருந்தேன்.
புதிதாக கைரேகையையும்
கருவிழியையும்
மீண்டுமொருமுறை பதிவு
செய்திவிட்டு வீட்டிற்கு
வந்துவிட்டேன்.
இரண்டு நாட்களுக்கு
ஒருமுறை எனது விவரங்கள்
பதிவேற்றப்பட்டுவிட்டனவா
என்று ஆதார் தளத்தில்
பார்த்துக்கொண்டிருந்தேன்.
சாதகமான தகவல்
வரவில்லை.
ஒருநாள் என்னுடைய
கைபேசி எண்ணிற்கு
ஒரு குறுஞ்செய்தி
வந்தது..
பதிவேற்றுவதில்
நடைமுறைச் சிக்கல்
உள்ளபடியால்
இன்னும் சிலநாட்கள்
பொறுத்திருங்கள் என்று.
அப்போதுதான் எனக்கு
ஒரு பொறி தட்டியது.
என்னுடைய கைபேசி யில்
mAadhaar என்ற செயலியை
நிறுவி அதன்மூலம்
என்னுடைய ஆதாரையும்
எனது மனைவியின்
ஆதாரையும் சேர்த்திருந்தேன்.
அப்போது ஒரு பாஸ்வேர்ட்
வைத்துக்கொள்ளும்படி
கேட்டுக்கொண்டது.
அந்த ரகசியக்குறியீடு
மொபைலில் செயலியை
பயன்படுத்துவதற்காக இருக்கும்
என்று நினைத்துக்கொண்டேன்.
ஆனால் அது நம்முடைய
பயோமெட்ரிக் தகவல்களான
கை ரேகைகளையும்
கருவிழி பதிவுகளையும்
வேறு யாரும் பார்க்காதிருக்க
வைக்கப்பட்டுள்ள ஒரு
பாதுகாப்பு ஏற்பாடு.
பொறி தட்டியவுடன்
கைபேசியில் mAadhaar ஐ
தட்டிப்பார்த்தேன்.
Biometric தகவல்களை
பிறர் பார்க்காதிருக்க
போடப்பட்டுள்ள
தடைத்திரையை
விலக்குவதற்கான்
ரகசியக் குறியீட்டை
பதிவு செய்ய
கேட்டுக்கொண்டது.
ரகசியக்குறியீடை
பதிவு செய்ததும் 10 நிமிடத்திற்கு
தடைத்திரை விலகி இருக்கும்
என ஒரு தகவல் தந்தது.
இந்த 10 நிமிட காலத்தில்
யாரும் நமது தகவல்களை
சரிபார்த்துக்கொள்ளலாம்.
இப்போது தான்
எனது தகவல்களை
BSNL நிறுவனத்தால்
ஏன் ஒப்பிட்டுப்பார்க்க
முடியவில்லை
என்பதை உணர்ந்தேன்.
அதற்குப்பிறகு
ஆதார் தளத்திற்கு சென்று
பார்த்தால் Biometric
Lock/unlock என்ற வசதி
கொடுக்கப்பட்டுள்ளதை
பார்த்து அறிந்துகொண்டேன்.
இதற்கிடையில்
ஆதார் அமைப்பின் உதவிக்குழு
எனது புதிய பயோ மெட்ரிக்
பதிவுகளை பதிவேற்றம் செய்து
முடித்த தகவலை
குறுஞ்செய்தியாக அனுப்பியது.
பிறகு திருச்சி சிங்காரத்தோப்பு
BSNL அலுவலகம் சென்று
நண்பர் திரு வேல்முருகனிடம்
ஆதார் இணப்பிற்காக
இந்த தகவல்களை
பகிர்ந்து கொண்டேன்.
அவர் வைத்திருக்கும்
சோதனைக்கருவியில்
விரல் ரேகையை பதிவதற்கு
முன் என்னுடைய mAadhaar
செயலியில் ரகசியக்குறியீட்டு
எண் மூலம் தடையை நீக்கினேன்.
ரேகையை பதிந்ததும்
உடனே ஏற்றுக்கொண்டது.
நான்கு இணைப்பு எண்களை
இணைக்க வேண்டியிருந்த்து.
நான்காவது எண்ணை இணைக்கமுயலும்போது
பத்து நிமிடம் முடிந்து விட்டதால்
தானாகவே திரை விழுந்துவிட்டது.
மீண்டும் ஒருமுறை
ரகசியக்குறியீட்டு எண்மூலம்
தடைத்திரையை விலக்கியதும்
நான்காது இணைப்பு எண்ணையும்
இணைக்க முடிந்தது.
ஆதார் தளத்தில் இத்தனை
பாதுகாப்பு வளையங்கள்
வைத்திருப்பதை அறிந்து
மகிழ்ந்தேன்.
இப்போது நமது தகவல்களை
யார்யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள்
என்பதையும் அறிந்து கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த விவரங்களை சரியாக
தெரிந்து வைத்திருக்காத்தால்
சிறு வசதிக்குறைவு எனக்கு
ஏற்பட்டது.
இந்த நேரத்தில் BSNL
நிறுவனத்திற்கு ஒரு பயனுள்ள
ஆலோசனை..
BSNL நிறுவனம் பயன்படுத்தும்
மென்பொருளில்
ரேகை பதிவு செய்ய வருபவர்கள்
ரகசியத்தை பாதுகாக்க
தடைசெய்திருந்தால்
அதை அறிந்து தெரியப்படுத்தினால்
வாடிக்கையாளர் தடைத்திரையை
பத்து நிமிடங்கள் விலக்கிவைத்து
இணப்பு எண்களை இணக்க
ஏதுவாக இருக்கும்.
எனது இந்த அனுபவத்தை
படித்துப்பார்க்கும் நண்பர்கள்
ஆதாரி்ல் உள்ள தங்களைப்பற்றிய
ரகசியத்தகவல்களுக்கு
பாதுகாப்பு வளைய வசதியை
பயன்படுத்திக்கொள்ளுமாறு
வேண்டிக்கொள்கிறேன்.
கைபேசியில்
mAadhar செயலியை
நிறுவி தங்களின்
ஆதார் அட்டையை
சேர்த்துக்கொள்ளும்படியும்
கேட்டுக்கொள்கிறேன்.
முதலில் இந்த செயலியை
கைபேசியில் நிறுவும் போது
அதன் அமசங்களை நன்கு படித்து
தெரிந்து கொண்டிருந்தால்
இந்த மோசமான அனுபவம்
ஏற்பட்டிருக்காது.
எனக்கு எல்லாம் தெரியும்
என்ற ஆணவத்திற்கு
கிடைத்த சம்மட்டி அடி
இந்த அனுபவம்.
ஆணவத்தை அகற்றுவோம்.
அனைத்தையும் அறிந்துகொள்வோம்.
No comments:
Post a Comment