நான் கிளை மேலாளராக
திருநெல்வேலி முதற்கிளையில்
இருந்த காலத்தில் தான்
ஜீவன் ஸ்ரீ என்ற புதிய பாலிசி
அறிமுகப்படுத்தப்பட்டது.
குறைந்தபட்ச காப்புத்தொகை
ஐந்து லட்சம் ரூபாய் என
நிர்ணயிக்கப்பட்டது.
முகவர்கள்,
வளர்ச்சி அலுவலர்கள்,
கிளை மேலாளர்களின்
விற்பனைத் திறனை
வளர்த்துக்கொள்ள
பொன்னான வாய்ப்பாக
இந்த திட்டம் இருந்தது..
இந்த திட்டத்தில் நிறைய
பாலிகள் வழங்கி
சாதனை பல படைத்தோம்.
திசையன்விளை பகுதியில்
ஒரு குடும்பத்தில்
நான்கு சகோதரர்களுக்கு
ஆளுக்கு ஐம்பது லட்சம்
காப்புத்தொகைக்கு
பாலிசி வழங்கி
கோட்டத்திற்கே
பெருமை சேர்த்தோம்.
அந்த பாலிசி சேரத்த
முகவர் இந்த நான்கு
பாலிகளின் மூலம் மட்டுமே
MDRT யின் COT நிலைக்கு
தகுதி பெற்றார்.
பல முகவர்கள்
இந்த ஜீவன்ஸ்ரீ பாலிசியை
ஒரு விஐபி பாலிசி என்றே
வாடிக்கையாளர்களிடம்
அறிமுகப்படுத்தி வந்தனர்.
இதைப்போலவே இப்போது
அறிமுகம் செய்யப்பட்டுள்ள
குறைந்தபட்சம் ஒருகோடி ரூபாய்
காப்புத்தொகை என்ற அளவில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
ஜீவன் சிரோன்மணி யும்
ஒரு விஐபி திட்டம் தான்.
களப்பணியாளர்களின்
விற்பனைத்திறனை
வெளிக்கொணர
இந்த திட்டம்
ஒரு நல்லவாய்ப்பு.
ஆண்டுத்தவணையில்
மூன்று பாலிசிகள்
வழங்கினாலே MDRT
என்ற பெருமை முகவருக்கு
கிடைக்கக்கூடிய
வாய்ப்புக்களை
வாரி வழங்கும் திட்டம்.
மூச்சடக்கி முத்தெடுங்கள்..
வாய்ப்பாளரை
நம்பிக்கையுடன்
அணுகுங்கள்.
விஐபி க்களுக்கு
விஐபி திட்டத்தில்
பாலிசி வழங்கி
விஐபி முகவராக
விரும்புங்கள்.
விரும்பியதை
பெற்றிடுங்கள்.
களப்பணியாள்களை
வாழ்த்தி மகிழ்கிறேன்.
No comments:
Post a Comment