Thursday, 12 May 2016

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..

தேர்தல் ஆணையம்
நடவடிக்கை எடுக்கத்தான்
செய்கிறது.

அவர்கள் அரசாங்க அலுவலர்களைத்தான்
நம்பி யிருக்கவேண்டியுள்ளது.

அவர்கள்
ஆளுங்கட்சிக்கு
ஆமாம் போட
வேண்டியிருக்கிறது.

ஒரு சில நேர்மையான அலுவலர்கள்
சிறுபான்மையாக
இருக்கிறார்கள்.

பெரும்பான்மை ஆட்டம்
போடுகிறது.

தில்லுமுல்லோ
அதிக தில்லுமுல்லோ
நமக்கு
அனுபவிக்கவேண்டிய
நிலமைதான்.

யார் வந்தாலும்
கையூட்டு விகிதம்
கூடத்தான் போகுது.

கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமையாய்
விரலிருந்தும் வீக்காய் தான்
காலந்தள்ளவேண்டும்.

காந்தி நாட்டு
விடுதலைக்காக
போராடினார்.
இன்றைய தலைகள்
காந்திக்காக
போறாடுகிறார்கள்.

நல்லது நடக்கும்
என்ற நம்பிக்கை
எனக்கில்லை.

நடப்பது நடக்கட்டும்.

No comments:

Post a Comment