1980 களில் நடந்த
உண்மைச் சம்பவம்.
எல்ஐசியில் ....
அப்போது கணினி
வசதி கிடையாது.
மதுரைக்கோட்டத்தில்
ஒவ்வொரு கிளையும்
அன்று வசூலித்த
புதுவணிகத்திற்கான
முன்வைப்புத்
தொகை எவ்வளவு,
எண்ணிக்கை
எத்தனை என்பதை
கோட்ட மேலாளருக்கு
அவரது பெயரில்
அவரது முகவரி
அச்சிடப்பட்ட
அஞ்சலட்டையில்
எழுதி ஸ்டாம்ப் ஒட்டி
நாள் தோறும் அஞ்சலில்
அனுப்பவேண்டும்.
மறுநாள் அவர் கைக்கு
கிடைக்கும்.
அவை பட்டியல் இடப்பட்டு
கோட்ட மேலாளர்
பார்வைக்கு
வைக்கப்படும்.
எண்ணிக்கையின்
அளவைப்பொறுத்து
தட்டிக்கொடுப்பதும்
திட்டி விரட்டுவதும்
நடக்கும்.
ஒரு கிளையில்
ஒரு ஊழியருக்கு
கோட்ட மேலாளர் மேல்
காட்டம்..
அவரை கடுப்பேற்ற
ஆசைப்பட்டார்.
கிளை அலுவலகத்தில்
ஏற்கனவே அச்சிட்டு
வைக்கப்பட்டிருந்த
நாள்தோறும்
அனுப்பவேண்டிய
அட்டைகளை கொத்தாக
எடுத்து ஒருநாள்
அப்படியே
அஞ்சல் தலை ஒட்டாமல்
அஞ்சல் பெட்டியில்
போட்டுவிட்டார்.
மறுநாள்
அவை அனைத்தும்
"DUE" முத்திரையுடன்
கோட்ட அலுவலகத்தில்
பட்டுவாடா செய்யப்பட்டன.
அந்த அபராதமும்
அஞ்சல் துறையால் வசூலிக்கப்பட்டதாக
கூறுவார்கள்.
இப்போது "வைரஸ்"
உள்ள மெயில்,
"Spam" மெயில் என்று
சொல்கிறோமே,
இதைப்போல் அன்றே
வைரஸ் அஞ்சல்
அனுப்பப்பட்டுள்ளது.
அனுப்பியது யாரென்று
அனைவருக்கும் தெரியும்.
ஆனால் நடவடிக்கை
எடுக்க முடியவில்லை.
எடுக்கப்படவும் இல்லை.
No comments:
Post a Comment