Sunday, 7 July 2019

உள்ளங் கவர்ந்த நாயகர்







என் உள்ளங் கவர்ந்த நாயகர்.....

LIC கோவைக் கூட்டத்தின் இப்போதைய வணிக மேலாளர் திரு பன்னீர்செல்வம் முதலியார் அவர்கள்

இந்த புதுச்சேரிக் காரர் LIC யில் வளர்ச்சி அலுவலராக இணைந்து துவக்கத்தில் பணியாற்றியது குஜராத் மாநிலத்தில்  தான்.

உதவிக்கிளை மேலாளர் நிலையில் தான் சென்னைக்கு மாற்றலாகி வந்தார்.  பணியாற்றிய அனைத்து இடங்களிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தவர்

பொறுப்பில் இருந்த அனைத்து இடங்களிலும் அனைத்து ஊழியர்களுடனும், குறிப்பாக களப்பணியார்களிடம் நெருங்கிப் பழகி, அந்த நல்லுறவின் மூலம் அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவே மதிக்கப்பட்டார்இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி அவர்களை நன்றாக உற்சாகப்படுத்தி உயர வைத்திருக்கிறார்.

இடங்கள் பல மாறினாலும், அனைத்துக்கிளைகளின் களப்பணியார்களும் இன்றும்  இவருடன் தொடர்பில் இருக்கிறார்கள். இவரும் தொடர்பில் உள்ளார்நல்லுறவு பேணினாலும், தட்டிக்கொடுக்க வேண்டிய வேளைகளில் தட்டிக்கொடுப்பார். குட்டி வைக்க வேண்டிய இடத்தில் குட்டியும் வைப்பார்

இவர் இருக்கும் இடங்களில் எல்லாம் வணிகம் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.  இவருக்கு அடுத்து அந்த கிளைகளுக்கு புதிதாக வரும் கிளை மேலாளர்கள் இவர் புரிந்த வணிக நிலையை எட்ட திணறுவார்கள். பெரும்பாடு பட்டுத் தான் அவர்களால்  நல்ல பெயர் வாங்க முடியும்தனக்குக் கீழ் பணிபுரிவர்களுக்கு இவர் நல்லதொரு வழிகாட்டி. உடன் பணியாற்றுபவர்களுக்கு உயிர்த்தோழன். உயர் அலுவலர்களுக்கு உற்ற துணையாய் இருப்பார்.

ஒரு சில கோட்டங்களில் முதன்மை யிடத்தில் இருக்கும் அலுவலருக்கும், இரண்டாம் நிலையில் இருக்கும் வணிக மேலாளருக்கும்  அவ்வளவாக ஒத்துப் போகாதுஇவர்கள் இணக்கமாக இல்லாத சூழ்நிலையில்கீழே இருப்பவர்கள் நன்றாக குளிர் காய்வார்கள். அது கோட்டத்தின் வணிகத்தை சிறிதளவு பாதிக்கும்

ஆனால் இவர் வணிக மேலாளராக இருக்கும் கோவைக் கோட்டத்தில், முந்தைய முதன்மைக் கோட்ட மேலாளர் திரு FAZLUL RAHMAN  அவர்களுக்கு தோள் கொடுக்கும் உற்ற தோழனாய் விளங்கினார்

அவர் தனது வாட்சாப்பில் , அவர் வணிக மேலாளர் திரு பன்னீருடன்  இருக்கும் ஒரு படத்தைத் தான் DP யாக வைத்திருந்தார். அப்படி ஒரு இணக்கத்துடன் இருந்தார்கள்இந்த இணக்கம் கோவை கோட்டத்திற்கு பெரும் வெற்றியைத் தேடிக்கொடுத்தது..

திரு பன்னீர் அவர்கள், முகவர்களுடனும், வளர்ச்சி அலுவலருடனும் ஒரு வாய்ப்பாளரையோ, வாடிக்கையாளரையோ சந்திக்கச் செல்லும்போது, பூங்கொத்து கொடுத்தோ,பொன்னாடை போர்த்தியோ தான் தன்னை அறிமுகம் செய்து கொள்வார்.  

இப்படியான இவரது செயல் வாடிக்கையாளருக்கு LIC மீதான மதிப்பை உயர்த்தியிருக்கிறது. வணிகப்பெருக்கத்திற்கும் பெரும் அளவு  உதவியிருக்கிறது.  அந்த வாடிக்கையாளர் திரு பன்னீர் அவர்களையும், LIC நிறுவனத்தையும்  எப்போதும் நினைவில் வைத்திருப்பார்

வாடிக்கையாளரிடம் வாங்கி வந்த முன்மொழிவுகளின் மீது , அவை முழுமையாகும் வரை தனது நேரடி கவனிப்பை வைத்திருப்பார்

இவரது இந்த குணம் களப்பணியாளர்களை கவர்ந்திழுக்கும்

இவர் பின்பற்றும் எண்ணற்ற வணிக யுக்திகளுக்கு ஈடு இணை கிடையாது. ஒரே யுக்தியை பயன்படுத்தமாட்டார். காலத்திற்கேற்ப, நபர்களுக்கேற்ப யுக்திகளை மாற்றிக்கொண்டே இருப்பார்

ஒரு முறை ராமன் என்ற மேலாளரிடம் பேசியபோது, ஒரு கூட்டம் நடத்த  எப்படி திட்டமிடுவது, அனைவரையும் எப்படி ஒருங்கிணைப்பது, வெற்றிகரமாக எப்படி நடத்துவது, போன்றவற்றை கற்றுக்கொடுத்தவர் திரு பன்னீர் அவர்கள் என்பதை ஒரு குரு பக்தியுடன் என்னிடம் பகிர்ந்தார்.

இவரை கை  பேசியில் யார் எப்போது அழைத்தாலும், "என்ன சார்... எப்படி இருக்கீங்க" என்று ஒரு வித ஏற்ற இறக்கத்துடன் அழைப்பார். அதைக் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்சென்ற மாதம் கூட ஈரோடு வளர்ச்சி அலுவலர் திரு சுப்பிரமணியன் அவர்களின் இல்லத்திலிருந்து நான் அவரை அழைத்துப் பேசினேன்அதே குரலில் அதே " என்ன சார்...எப்படி இருக்கீங்க" என்ற சொற்களுடன் என்னிடம் நலம் விசாரித்தார்

அவரிடம் பேசுவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சியைத் தரும். எனக்கென்ன எல்லோருக்குமே மகிழ்ச்சியைத் தரும்இப்படி எல்லோருடனும் ஒரு நல்  உறவு பேணும் உயர்ந்த குணம் தான் இவரது வெற்றிக்கு அடிப்படை. இவரைப்போல் அனைவருடனும் உறவு பேணுவது மற்றவர்களுக்கு கடினமான ஒன்று

இவரைப் போன்ற பல அலுவலர்களும் , ஊழியர்களும்களப் பணியார்களுடனும் வாடிக்கை யாளர்களுடனும் பேணுகின்ற நல்  உறவு தான் LIC என்ற மாபெரும் நிறுவனம் ஓங்கி உயர்ந்து நிற்க அடிப்படைக் காரணம்

பாளை .இசக்கிராஜன்.

No comments:

Post a Comment