"ஏல...எசக்கி
என்னல நீ
தன்னால பேசிகிட்டு
ஜாலியா வார.."
"ஆமவே ..சொடல..
சந்தோசமாத்தாம் வே
இருக்கேன்."
"என்னல சங்கதி?"
"இன்னைக்கி
நாங்க படிச்ச
பள்ளிக்கூடத்துக்கு
போயிருந்தோம்.
"எட்மாஸ்டர் சாமிகிட்ட
எங்க வாத்தியாரை பத்தி
ராஜாக்கள் தெரு குமாரு
எடுத்து வுட்டான்.
அவருக்கு ஒரே ஆச்சரியம்"
"அப்படி என்னல
அந்த குமாரு
சொல்லிட்டாவொ"
" எங்க சார்வாள்
யாரும் தனியா
ட்யூஷன் படிக்கக்கூடாதுன்னு
சொல்லுவாவொ.
ஆனா
வீக்கா இருக்கொவள
அவொவீட்டுக்கு வரச்சொல்லி சல்லிக்காசு வாங்காம சொல்லிக்கொடுப்பாவொ."ன்னு
சொன்னாவொ.
எட்மாஸ்டர் அப்புடியே
அசந்துட்டாவொள்ளா."
"வேற என்ன சொன்னாவொ
ஒம்ம குமாரு ?"
"எங்க சார்வாள்
ஒவ்வொரு பையங்களையும்
ஒரு ரூவாய்க்கு
வேறவேற
கதை பொஸ்தம்
ஒண்ணு வாங்கிட்டு
வரச்சொல்லுவாவொ.
ஒவ்வொரு
திங்கக்கெளமையும்
எல்லாப் பையங்களும்
பொஸ்தகத்தை
மாத்திக்கணும்.
ஒரு வருசத்துல
நாப்பது வேரும்
நாப்பது பொஸ்தவத்தையும்
படிச்சு முடிச்சிருவாவொ.
கடைசியல
அவனவன்
பொஸ்தவத்தை
அவன்அவன்
எடுத்துக்கணும்.
இப்படில்லாம் செஞ்சு
எல்லோருக்கும்
பொஸ்தவம் படிக்கிற
பளக்கத்தை
உண்டாக்குனாவொன்னு
சொன்னா வொ"
"எட்மாஸ்டரு சாமி என்ன
சொன்னாவொ?"
"இது நல்லாயிருக்கே ன்னு
ஆச்சரியப்பட்டாவொ"
"குமாரு வேற என்ன
சொன்னா வொ"
"அடுத்தால
குமாருக்கு பதுலா
நமசிவாயம் பேசுனாவொ.
பள்ளிக்கூடத்துலேய
ஒவ்வொரு பையங்கிட்டயும்
இருக்க தெறமையை
ஏத்திவிடுததுக்கா
பாட்டுபடிக்க
இசையமைக்க
டான்ஸ் ஆடன்னு
வாய்ப்பு தருவாவொன்னு
சொன்னாவொ.
எட்மாஸ்டரும்
அப்படியான்னு
கேட்டுட்டு
இதெல்லாம் எப்போ
பண்ணுவியொன்னு
கேட்டாவொ.
வாரத்துல ஒருநாளு
கடைசி பீரியடுல
பண்ணுவம்னு
நமசிவாயம்
சொன்னவொ"
"இந்த பாட்டு படிச்சது
தாளம்போட்டதுல்லாம்
யாருடே.
ஒனக்கு ஞாவகம்
இருக்கால எசக்கி?"
" நல்லா ஞாவகம்
இருக்குவே.
ஸ்ரீ மூலநாதனும்
ரங்கராஜனும்
பாட்டு படிப்பாவொ.
விஜயனும்
ராம்பிரசாத்தும்
தபேலா
வாசிப்பாவொ.
இந்த குமாரு
நல்லா
டானஸ்
ஆடுவாவொ?"
"வேற என்னவெல்லாம்
எட்மாஸ்டர்கிட்ட
சொன்னீயொ"
"ஒவ்வொரு
கிளாசுப் பையங்களும்
கிளாஸ் மேகசீன்
ஒண்ணு சொந்தமா
தாயாரிக்கணும்.
ஸ்கூல்ல
செறந்த மேகசீனுக்கு
பர்ஸ்டு செகண்டுன்னு
பிரைசெல்லாம்
கொடுப்பாவொ.
எங்க கிளாசுக்கு
பல தடவை பிரைசு
கெடச்சிருக்கு.
நல்லா
படம் வரையிறவொ
படம் வரஞ்சு
கொடுப்பாவொ.
கொஞ்ச பேரு கட்டுரை
வெள்ளை தாளுல
எழுதிக்கொடுப்பாவொ.
நல்ல கையெழுத்து
இருக்கவொ
இதையெல்லாம்
ஒவ்வொரு பக்கத்துலயும்
எழுதித்தருவாவொ.
கலர் கலரா
வில்லை வேங்கி
அதை தண்ணியில கரச்சு
டூத் பிரசை அதுல முக்கி
அதால தலைசீவுத
சீப்புக்குமேலயோ,
சின்ன ஓட்டை உள்ள
வலைமேலயோ
வச்சு தேச்சு
ஒவ்வொரு டிசைனுல
ஒவ்வொரு பக்கத்தையும்
அளகு படுத்துவோம்னு
சொன்னோம்.
எட்மாஸ்டருக்கு
சந்தோசம் தாங்கல"
"எசக்கி சொல்லுததை
கேக்க எனக்கு
ரொம்ப சந்தோசமா
இருக்கு.
அப்பொல்லாம்
படிப்புக்கும் முக்கியம்
கொடுத்திருக்காவொ.
வேற தெறமைக்கும் முக்கியம் கொடுத்திருக்காவொ.
இப்ப உள்ள
வாத்தியாரு மாருஞ் சரி
புள்ளய பெத்தவொளும் சரி
எல்லாரும் மார்க்குக்குல்லா முக்கியம் கொடுக்காவொ.
இந்த எண்ணத்தை
நஎல்லா மாத்திகிட்டு
எல்லா தெறமையையும்
வெளிய கொண்டு வரமாதிரி
கல்வி முறையை
மாத்தணும்டே.
அப்பத்தான்டே படிப்பு
நல்லாயிருக்கும்.
ஆனா நடக்குமான்னு
தெரியல..
என்னத்த பண்ண முடியும்
நம்மால."
சொடல சொல்லுத மாதிரி
கல்வி மொறை மாறணும்.
மாறுமா?
No comments:
Post a Comment