Thursday, 12 October 2017

சொந்த புத்தி..சொல்புத்தி

"யோவ்... சொடலை..

இன்னய்க்கு நம்ம
ஆபிசுல வேலை பாக்குற
ஆயிரத்தான பாத்தேன்வே.

மெடிக்ளைம்ல
நாம விருப்பட்டா
காப்புத்தொகை
அம்பது லட்சம் ரூவா வரை  எடுத்துக்கலாமாம்.

மொத்த குடும்பத்துக்கும் மருத்துவச்செலவு
வருசத்துக்கு
அம்பதுலச்சம்வரை
பாதுகாப்பு உண்டாம்."

" அதுக்கு நீ என்னல
சொன்ன?"

"நான் வந்து
அதுல்லாம் எங்களுக்கு
வேண்டாம் யா.

இப்ப இருக்க
கொறைஞ்சபச்ச
எட்டுலச்சமே
எங்களுக்கு போதும்னு
சொல்லிட்டேன்.

இருக்க செலவுல
இதுவேற
தெண்டச் செலவான்னு
சொன்னேன்.

ஒம்ம இஷ்டமுன்னு
சொல்லிட்டு வெரசலா
ஓடிப்போயிட்டான்
அந்த ஆயிரத்தான் பயா.

நாஞ்சொன்னது அந்த
பயலுக்கு புடிய்க்கலன்னு
நெனய்க்கேன்.

நீரு  இதப்பத்தி
என்னவே
நெனய்க்கேரு."

"முந்தி புதுசா
PF க்கு பதுலா பென்ஷன்
கொணாந்தப்போ
நீ பெரிய
அதிமேதாவிங்கிற
நெனப்புல
பென்சன் வேண்டாம்,
PF தான்  வேணும்னு
பென்ஷனுக்கு
கையெழுத்து போடாம
இருந்துட்டு
இப்போ மூக்கால
அளுதுகிட்டுஇருக்க.

பாக்குற எல்லா
யூனியன் காரவொளையும்
இன்னொரு தடவை
விருப்பம்  கேக்கதுக்கு
ஏற்பாடு பண்ணுங்கன்னு
வாணால  வாங்கிட்டு இருக்க.

ஒனக்கு சொந்தபுத்தியும்
கெடையாது.
சொல்புத்தியும்
கெடையாது.

எல்லாம்  எனக்கு
தெரியும்ங்க
திமிரு ஒனக்கு.

ஆனா
ஒனக்கு ஒரு மண்ணும்
தெரியாதுங்குறது
எங்க எல்லாத்துக்கும்
நல்லாத்தெரியும்.

நம்ம ஆபீசுல
ஒருத்தரு..
போனதடவை
முப்பதுலச்சம் வரை
மெடிக்கிளைம்
காப்புத்தொகைக்கு
விருப்பங்கொடுக்கலாம்னு
சல்க்குலர் வந்தப்போ
எனக்கு அவ்வளவுல்லாம்
எதுக்கு..வேண்டாம்.

நான் நல்லா
திடுமங்காளை மாதிரி
இருக்கேன்.
என்னோட பெஞ்சாதி
என்ன விட ஆரோக்யமா
இருக்கா.

ஒடம்புல
ஒரு கொறையும்
இதுவரை இல்லை.

இந்த எட்டு லச்சமே 
எங்களுக்கு அதிகம்னு
அடிச்சு சொல்லிட்டாரு.

கொஞ்சநாள்லயே 
இதயக்கோளாறு வந்து
ரொம்ப  செலவாச்சு..

ஆசுபத்திரி செலவு
கைய கடிச்சுட்டு்.

இப்ப அவரு  பண்ணுன
தப்பை  நெனச்சு
நெதமும் 
வருத்தப்படுதாரு.

இன்னொருத்தரு 
இதமாதிரியே  புடிவாதமா 
சொன்னாரு.

திடீர்னு ஒடம்பு
சரியில்லாம போச்சு.

வீட்டுல  உள்ளவொ
ஒரு தனியாரு  ஆசுபத்திரியில
போயி சேத்தாவொ.

இன்சூரனஸ்  இருக்குன்னு  சொன்னதும்  ராஜமரியாதயோட  கவனிச்சாவொ.

ஒடம்பு சரியாவல.

பில்லு எட்டு லச்சம் 
தாண்டுனதும்
இனி இங்க இருக்கதுல
எந்த பிரயோஜனமும்
இல்லை.

அதுனால
கெவர்மெண்டு ஆசுபத்திரிக்கு கொண்டுபோங்கன்னு
சொல்லி
மேக்கோண்டு
ரெண்டு லச்சம் ரூவாய்க்கு
பில்லு வேற போட்டுட்டாவொ.

பொறவு என்னா..
கெவர்மெண்டு ஆசுபத்திரிக்கு கொண்டுபோனாவொ.

ரெண்டுநாள் களிச்சு
மேலயும் போய்
சேந்துட்டாவொ.

இப்போ
அவொ  வீட்டுல
லபோ திபோங்குறாவொ.

முப்பது லச்சத்துக்கு 
விருப்பம் தெரிவிச்சுருந்தா
அவொ உயிரை
காப்பாத்தி யிருக்கலாம்னு
கதறி அழுதாவொ.

பாவமா இருந்துச்சு.

இந்த இன்ஷூரன்சால
எனக்கு என்ன
கெடைய்க்கும்னு
நெனய்க்கக்கூடாதுடே.

எதுனாச்சும் வந்தா
மருத்துவ பாதுகாப்பு 
இருக்குங்கிற 
நம்பிக்கையே 
ஒடம்பை
நல்லாயிருக்க வைக்கும்.

நம்ம மாதிரி
வயசானவொளுக்கு
கட்டாயம் கண்ணுல 
கேட்ராக்ட் வரும்.

ஒரு கண்ணுல
ஆப்பரேஷன்
பண்ணுனாலே
நாலு வருசங்கட்டுன
பிரிமியம் கிளைமா
திரும்பி வந்துரும்.

ரெண்டாவது  கண்ணுலயும்
பண்ணும்போது
இன்னம் நாலு வருச  பிரிமியம்  சரியாயிரும்.

ஒனக்கு
ஒரு செலவுமே 
வரலன்னா
மொகந்தெரியாத
பலருக்கான கிளைமுக்கு
நன்கொடை  கொடுத்தமாதிரி
மனசார சந்தோசப்படுடே.

இப்படி
பெரிய மனசோட
நெனைச்சுப்பாருடே.

இதை விட்டுட்டு
வேறமாதிரி  வில்லங்கமா
நெனய்க்காதடே"

"சொடலை சொல்லுத
பாயிண்டு இப்பத்தாம்யா
என்னோட மர மண்டையில
ஏறுது.

ஒடனயே ஓடிப்போயி
அம்பது லச்சம் ரூவா 
காப்புத்தொகை 
கட்டாயம்  வேணும்னு  கையெழுத்துப்போட்டு குடுக்கப்போறன்.

நல்லவேளைய்யா 
நான் இப்ப ஒம்மை
இங்க பாத்தேன்.

அதுனால தப்பிச்சேன்."

No comments:

Post a Comment