எசக்கி யும் சொடலையும்
தோள் மேல கையை போட்டு
பேசிட்டே
ஒண்ணா வராவோ.
என்ன நொறநாட்டியம் பண்ணப்போறாவொளோ
தெரியலயே.
அவொ பேசுதத
ஒளிஞ்சிருந்து
ஒட்டுக்கேப்பொம்.
"ஏல எசக்கி.....
ஒரு அவசரவேலையா
நேத்து காலைல
மதுரைக்கு போனன்டே.
நான் வீட்லயிருந்து
பைக்ல வரும்போது
ATM ல ஒரு
பத்தாயிரம் ரூவா
பணம் எடுத்தேன்.
அந்த
ATM பேதில போவான்
ஐந்து ரெண்டாயிரம்
ரூவாத்தாளு வருதமாதிரி
ப்ரொக்ராம் பண்ணி
வச்சுருக்காம்டே.
அதுனால எனக்கு
ரெண்டாயிரம் ரூவாத்தாளு
அஞ்சு வந்துச்சு.
என்னால ஒடனே
எங்கியும் போயி அதை
சில்லறையா மாத்தமுடியல.
விடியக்காலம்பர
ஒரு பயலுவொளும் கடையத் தொறக்கல.
நானும்
வர்றது வரட்டும் னுட்டு
பெரிய பஸ் ஸ்டாண்டு வந்து
வெரசலா போயிரலாம்னு
பைபாஸ் ரைடர்
பஸ்ல ஏறிட்டேன்.
மதுரைக்கு டிக்கட்
95 ரூவாய்னு
சென்னாவொ.
நான்
ரெண்டாயிரம் ரூவா தாளை
கண்டக்டர்கிட்ட நீட்டுணேன்.
அவொ அதுக்கு
எரிச்சல்லாம் படாம
சிரிச்சுகிட்ட
என்ன அண்ணாச்சி..
95 ரூவாய்க்கு பணமா
கொடுக்காம
பாங்கு DD யை தாரேள.
DD ல்லாம் வாங்குததுக்கு
எங்க மேலாபீசுலயிருந்து
இதுவரைக்கும்
உத்தரவு ஒண்ணும் போடலய
அண்ணாச்சின்னு
சொன்னாவொ.
நான் ATM காரனை
ஏசிக்கிட்டே..
நான் வந்து
மதுரையில எறங்கும்போது
மீதியை வாங்கிக்கிறம்
தம்பி ன்னு
சொன்னேன்.
அப்பமும் ஒங்ககிட்ட
சில்லறை சேரலண்ணா
நாங் கீள எறங்குனதும்
எங்கியாவது
சில்லறையா
பொறட்டி தந்துட்டு
ரெண்டாயிரம் ரூவாத்தாளை
திரும்பி வாங்கிக்குறேன்
தம்பின்னு சொன்னேன்.
கண்டக்டர் என்னப்பாத்து
கவலப்படாதீய..
சில்லறை நோட்டு
சீக்கிரம் வந்துரும்.
வந்ததும் நானே தாறேன்.
கவலப்படாதீயன்னு
பொறுமையா சொன்னாவொ.
என்ன மாதிரியே
நாலஞ்சு வேரு
ரெண்டாயிரம் ரூவாத்தாளை
கொடுத்திருக்காவொ.
அந்த பொறுமைசாலி
கண்டக்டரு கோயில்பட்டி தாண்டுனதுமே பாக்கி யை
எல்லாருக்கும் பைசல்
பண்ணிட்டாவொ.."
"சொடலை சொல்லுததை
பாத்தா நம்மகிட்ட
எப்போதும் சில்லறை
தாராளமா இருக்கணும்னு
தோணுது"
"ஆமடே..எசக்கி
இதுக்குத்தான்
நம்ம கூட காலேஜ்ல ஒண்ணா படிச்சாவொளே ஒரு தெங்காசிக்காரவொ..
அவொ பேரு நல்ல பேருல்லா..
ஆங்.. பரிமேலழகன்.
அவொ ஒரு யோசனை சொன்னாவொ."
"என்ன யோசனைன்னு
சட்டுபுட்டுன்னு
சொல்லித்தொலையும் வே"
"அதாவது எசக்கி..
பத்தாயிரத்துக்கு பதுலா
9900 ன்னு ATM ல
பணங்கேட்டா அதுக்கு
2000 த்துல 4 தாளும்,
500 ல 3 தாளும்
100 ல 4 தாளும்ன்னு
நமக்கு வரும்.
நம்ம சிக்கல்
ஒருமாதிரி
தீந்தமாதிரியிருக்கும்னு
தன்னோட
அனுபவத்தை வச்சு
சொன்னாவொ"
"சொடல சொல்லுதமாதிரி
"பரி" யோசனையை
கேட்டு நடந்தா நாம
யாரு முன்னாலயும்
"பரி"தாபப்பட்டு
நிய்க்கவேண்டாம்.
இனி அப்பிடியே
100 ரூவாய் கொறச்சே
ATM ல பணம்
எடுப்போம்வே"
பரி சொன்னது
சரி......
ரொம்ப சரி.
ரொம்ப...
ரொம்ப... சரி.
No comments:
Post a Comment