இந்த எசக்கிப் பயா
ஏங்கிட்ட வந்து
சரித்திரம் திரும்புதுவே
சொடலை ன்னு சொன்னான்.
எப்பிடில இப்புடி
சொல்லுதன்னு
கேட்டேன்.
ச-தி அணி
சோழர்களாம்..
ஓ.பி.எஸ். அணி
பாண்டியர்களாம்..
ஈ.பி.எஸ் அணி
சேரர்களாம்.
நடப்பது
பாண்டியர் ஆதரவுடன்
சேரர் ஆட்சி யாம்.
இந்த எசக்கிப்பயா
இப்பிடி சொல்லுதாம்.
இந்த மூதேவியை
என்னத்த சொல்ல..
விட்டா
வட பகுதி மாநிலத்து
பல்லவர்களும்
ஆதரவும்பாம்.
பிஜேபி ஆதரவை
கனக விஜயர்
ஆதரவுன்னு
சொல்லப்போறாம்.
ரஜினி ஆதரிச்சா
வீரசிவாஜி
ஆதரவும்பாம்
போல இருக்கு.
இந்த கருமத்தை
எங்க போயி
சொல்லி அழ...
No comments:
Post a Comment