Tuesday, 13 December 2016

இலவசமா?

நான் எல்ஐசி திருச்செந்தூர் கிளையில் 
கிளை மேலாளராக இருந்த நேரம்.

ஆறுமுகநேரி சாகுபுரத்தில் உள்ள
DCW நிறுவனத்தில் 
அலுவலகப் பணியாற்றிய
திரு பரமசிவன் என்ற நண்பர்
எங்கள் முகவராகவும் சிறப்பாக 
பணியாற்றி வந்தார்.

அந்த காலகட்டத்தில் 
DCW போன்ற நிறுவனங்களில்
சம்பள சேமிப்புத்திட்டத்தில் 
பாலிசி வழங்குவது பிரபலம்.

சம்பளத்திலேயே தவணைத்தொகை
பிடித்தம் செய்யப்படுவதால் பாலிசிகள்
பாலிசி காலம் முழுமையும்
அமுலில் இருக்கும்.

இது வாடிக்கையாளருக்கும்
எல்ஐசி நிறுவனத்திற்கும்
முகவருக்கும் பலன்தரக்கூடியது.

எனவே இந்த்த்திட்டத்தில்
பாலிசி வழங்க முகவர்கள்
ஆர்வம் காட்டுவார்கள்.

அதற்காக அலுவலத்தில்
முதல்தவணையாக இரண்டு
மாதத் தவணைகள் செலுத்தவேண்டும்.

போட்டி காரணமாக முகவர்களே
இந்த இரண்டு தவணைகளை

செலுத்திவிடுவார்கள்..

மேலும் சிலர் 
இன்னொரு தவணையை
வாடிக்கையாளரிடம் 
வழங்கி விடுவார்கள்.

மேற்குறிப்பிட்ட திரு.பரமசிவன்
இந்த திட்டத்தில் இந்தமுறையில்
சிற்பாக வணிகம் 
புரிந்துகொண்டிருந்தார்.

எல.ஐ.சி.நிறுவனத்தில்
வேறு எந்த நிறுவனத்திலும் 
இல்லாத சிறப்பு ஒன்று உண்டு.

புத்தாண்டிற்காக முகவர்கள்
வாடிக்கையாளர்களுக்கு 
பரிசளிக்க மானியவிலையில்
நாட்குறிப்பும் நாட்காட்டியும்
தயாரித்து வழங்கும்.

என் நண்பர் திரு.பரமசிவன்
எங்கள் அலுவலகத்தில் 
பணம் செலுத்தி வாங்கி
அவற்றை ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு
மட்டும் புத்தாண்டுப்பரிசாக
வழங்கி மகிழ்வார்.

நாட்காட்டியோ, நாட்குறிப்போ
பரிசாக கிடைக்கப்பெறாத 
வாடிக்கையாளர்கள்
திரு.பரமசிவனிடம் கேட்பார்கள்.

அவற்றிற்கு திரு பரமசிவன் அளிக்கும்
பதில் இருக்கிறதே..
அது பொன்னெழுத்துக்களால்
பொறிக்கப்பட வேண்டிய 
ஒரு வாழ்க்கை நெறி..

திரு பரமசிவன் கூறிய பதில்
அவரது வார்தைகளிலேயே தருகிறேன்.

" ஏல...
நீ என்னைக்கி ஏங்கிட்ட 
ரெண்டு பிரிமியத்துக்கு ஓன் பாலிசியை 
வித்தியோ அப்பவே ஒனக்கும் எனக்கும்
உள்ள டீல் முடிஞ்சிட்டு..

டைரி காலண்டர் கேக்க ஒனக்கு
தார்மீக உரிமை கெடயாது.

நீ மட்டும் ரெண்டு பிரிமியம் வாங்காம
பாலிசி எடுத்திருந்தா நான் ஒனக்கு
காலண்டரும் டைரியும் ஆயுசுகாலத்துக்கும் தருவேன்.

போல..ஓஞ்சோலிய பாத்துட்டு"

படிக்கின்ற பலருக்கும் பரமசிவன்
சுயநலவாதி என நினைக்கத் தோன்றும்.

ஆனால் அவர் கூறியது எவ்வளவு பொருள்
பொதிந்த வார்த்தை தெறியுமா?.

இன்றைய அரசியல் நிலையை 
நினைத்துப்பாருங்கள்.

வாக்குக்கு விலை பேசி நோட்டோ
இலவசமோ வாங்கினபிறகு
பிரச்சினைகளுக்காக அணுகினால்
மக்கள் பிரதிநிதிகள் பரமசிவன் 
மாதிரிதானே பதில் அளிப்பார்கள்.

ப.இசக்கிராஜன்

No comments:

Post a Comment