Saturday, 14 September 2013

Pudhiya

புதிய தலைமை அமைச்சர் வேட்பாளர்கள் ......

பா ஜ  க தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது.
வதந்தியாக கூறியதை உண்மை என்று தெரிவித்து விட்டது.

காங்கிரஸ் இன்னும் ஊரறிய உரைக்கவில்லை என்று  பா ஜ க
காங்கிரசை உசுப்பி விடுகிறது. அறிவிக்கப்பட ஆட்களே இல்லை
என்று அலம்பிக்கொண்டு இருக்கிறது.

பிறக்க போகிற குழந்தைக்கு கூட காங்கிரசின் வேட்பாளர்
யார் என்று தெரியும்.  ஒருவேளை பெரும்பான்மை கிடைத்தால்
ஒரு பொம்மையை கை காட்டிவிட்டு அறிவிக்கப்பட்ட
வேட்பாளர் தியாகியாக சித்தரிக்கப்படுவார்.

காங்கிரஸ் ஒரு வேளை வெற்றிபெற்றால் இது தானே
நடக்க போகிறது .

பா ஜ க வெற்றி பெற்றாலும் பொருளாதார கொள்கையில்
ஒரு மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லையே.

ஒரு வேளை மூன்றாவது அணி என்று ஒன்று வந்தாலும்
கவுடா முலாயாம் என்று சுயநல வாதிகள் தானே
சுருட்ட வருவார்கள்.

பின் ஏன் இந்த தேவையற்ற கூச்சல்.

என்று வரும் ஏழைகளுக்கு இலவசமற்ற
விடிவுகாலம்?

நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
விடிவுகாலம் வரும்.

1 comment:

  1. True pa... For the people of this nation, only there s going to be change in faces...everything else will remains same or can go worse

    ReplyDelete